• Latest News

    November 15, 2014

    மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை: மாதுளுவாவே சோபித தேரர்

    பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் பொது வேலைத்திட்டம் சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வில் அம்புலன்ஸ் வண்டியில் சென்றாவது கலந்து கொள்ள போவதாக மாதுளுவாவே சோபித தேரர் கூறியுள்ளார்.

    அத்துடன் மிரட்டல்களுக்கு அச்சுறுத்தல்களுக்கும் தான் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    திடீர் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சோபித தேரரின் நலமறிய சென்றிருந்த தினியாவல பாலித தேரரிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை திட்டமிட்டப்படி திங்கட்கிழமை மதியம் பொது வேட்பாளர் தொடர்பான பொது வேலைத்திட்டம் குறித்த உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் முக்கியஸ்தரான சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை: மாதுளுவாவே சோபித தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top