• Latest News

    December 13, 2014

    நாட்டை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்துவதே எனது அடுத்த குறிக்கோள்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

    நாட்டில் நடைபெற்ற போரை நான்கு வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    மாத்தறை தெளிஜ்ஜவில வாராந்த சந்தையை திறந்து வைத்த பின்னர் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    நாட்டை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்துவதே எனது அடுத்த குறிக்கோள். அதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளன. நாடு அன்று காணப்பட்டதை போன்று தற்போது இல்லை. நாடு தற்போது முன்னேற்றமடைந்துள்ளது.

    நாட்டின் பிள்ளைகள் உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும். பிள்ளைகள் உலகத்தை வெல்ல வேண்டும். மக்கள் அரசாங்கத்தின் மீது இரு முறை நம்பிக்கை வைத்தனர்.

    அந்த நம்பிக்கையை நாங்கள் சிதைக்கவில்லை. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை சிதைக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்துவதே எனது அடுத்த குறிக்கோள்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top