• Latest News

    December 04, 2014

    யுத்­தத்தின் பின் சமா­தானம் கிடைக்­க­வில்லை, நல்­லாட்சி நடை­பெ­ற­வில்லை: மைத்­தி­ரி­, ராஜித

    இன்று நாட்டில் நல்­லாட்சி இல்லை. அனைத்தும் அல­ரி­மா­ளிகை மூலமே நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. அமைச்சின் செய­லா­ளர்கள் மற்றும் அதி­கா­ரிகள் சுயா­தீ­ன­மாக கட­மை­களைச் செய்ய முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. அவர்­க­ளது கட­மைகள் அல­ரி­மா­ளிகை மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லைமை மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு நல்­லாட்சி நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­படும் என எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.
    NFGG 17நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி (NFGG ) பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வுக்கு ஆத­ரவு வழங்கும் முக­மாக ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
    தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில் நாட்டில் யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டாலும் தொடர்ந்தும் மக்கள் பயத்­து­டனே வாழ்­கின்­றார்கள். ஏனென்றால் நாட்டில் நல்­லாட்சி நடை­பெ­ற­வில்லை. நாட்டு மக்­க­ளுக்கு சுதந்­திரம் இல்லை. நீதி­மன்ற சுயா­தீனம் இல்லை. நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. நல்­லாட்­சி­யுள்ள நாடென்றால் மக்­க­ளுக்கு சுதந்­திரம் இருக்க வேண்டும்.
    இன்று ஊடக சுதந்­தி­ர­மில்லை. ஊட­கவி­ய­லா­ளர்­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யா­தி­ருக்­கி­றது. எழு­தி­யதைப் பிர­சு­ரிக்க முடி­யா­துள்­ளது. ஊடக நிறு­வ­னங்கள் அல­ரி­மா­ளிகை மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. பிர­சு­ரிக்­கப்­பட வேண்­டிய செய்­திகள் படங்கள் கூட அல­ரி­மா­ளி­கை­யி­னாலே நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன.
    வர்த்­தகத் துறையில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யா­துள்­ளது. அர­சாங்க ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ரமே வர்த்­த­கத்­திலும் இறக்­கு­மதித் துறை­யிலும் வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது. தேசிய வரி மதீப்­பீட்­டுத்­தி­ணைக்­களம், கலால் வரி திணைக்­களம், சுங்க வரி திணைக்­களம் அனைத்தும் அரச ஆத­ர­வா­ளர்­களின் செல்­வாக்­குக்கு உட்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
    எனது பிர­சா­ரத்­திற்கு கட் அவுட்கள் தேவை­யில்லை. தேவை ஆசீர்­வாதம் போன்று நான் மக்கள் மனதில் இடம் பிடித்­துள்ளேன். மக்கள் ஆசீர்­வாதம் என் பக்­க­முள்­ளது. ஒவ்­வொரு நக­ரத்­திலும் ஒவ்­வொரு கிரா­மத்­திலும் ஒவ்­வொரு வீட்­டிலும் நல்­லாட்­சியை எதிர்­பார்த்து மக்கள் காத்துக் கிடக்­கின்­றார்கள்.
    எனது 49 வருட அர­சியல் வாழ்வில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்து 13 வரு­ட­காலம் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்து நிறைந்த அனு­ப­வங்­களைப் பெற்­றுள்ளேன். நாட்டு மக்­களின் நல­னுக்­காக எனது கட­மையை சரி­வர நிலை நாட்­டுவேன். நாட்டு மக்கள் தமது மதங்களை சுதந்­தி­ர­மாக கடைப்­பி­டிப்­ப­தற்கு நான் உறுதி செய்வேன். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை இல்­லாமற் செய்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­துவேன் என்றார்.
    NFGG 22
    முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன பேசு­கையில், யுத்தம் முடி­வுக்கு வந்­ததும் நாட்டு மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த எதிர்­பார்ப்­புகள் எதுவும் நிறை­வே­ற­வில்லை. நாட்டில் சம­யங்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்­களே நடந்­தன. நான் நாட்டில் இல்­லாத போது அளுத்­க­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் இடம்­பெற்­றன. யுத்­தத்தின் பின் சமா­தானம் கிடைக்­க­வில்லை.
    யுத்தம் முடி­வ­டைந்தும் தமி­ழர்கள் பாதைகள் கேட்­க­வில்லை. அபி­வி­ருத்தி கேட்­க­வில்லை. தொழில் கேட்­க­வில்லை. உரி­மை­க­ளுடன் வாழு­வ­தற்­கான சூழ­லையே கேட்­கி­றார்கள்.
    முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்று உடை­ய­வர்கள். அவர்கள் இங்கு தனி­யாக வந்து எமது பெண்­களை மனை­வி­யாக்கி கொண்­டார்கள். முஸ்­லிம்கள் எமது சகோ­த­ரர்கள் நாட்டின் சுதந்­தி­ரத்தை சிங்களவர்கள் மாத்திரம் தனித்துப் பெற்றுக் கொள்ளவில்லை. நாட்டின் சுதந்திரத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பங்கிருக்கிறது. எனவே நாமனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.
    ஜனவரி 8 ஆம் திகதியின் பின்பு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவது உறுதி செய்யப் பட்டுவிட்டது. மூவின மக்களும் சேர்ந்து அவருக்கு ஆதரவினை வழங்குவோம் என்றார்- VK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யுத்­தத்தின் பின் சமா­தானம் கிடைக்­க­வில்லை, நல்­லாட்சி நடை­பெ­ற­வில்லை: மைத்­தி­ரி­, ராஜித Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top