தன்னை மானபங்கப்படுத்திய பின்னர் திரெளபதி கெளரவர் சபையில் சபதம் எடுக்கிறாள். துரியோதனன் குருதியை வாரி எடுத்து தலையில் பூசினால் அன்றே அவிழ்ந்த கேசத்தை முடியேன் என்பது அச்சபதம்.
பெண்கள் சபதம் எடுத்தால் ஆண்கள் சும்மா இருப்பார்களா என்ன? திரெளபதியின் சபதத்தோடு பாண்டவர்களும் சபதம் எடுக்கின்றனர். அச் சபதமே குருசேத்திரப் போரும் கெளரவர்களின் தோல்வியுமாயிற்று.
பொதுவில் காப்பியங்கள், இதிகாசங்களில் இடம்பெற்ற யுத்தங்களின் பின்னணியில் சபதங்கள் இருந்துள்ளன.
அந்தச் சபதங்கள் வெற்றி பெற்றதான வரலாறுகளும் உண்டு. இராமாயணத்தில் அசோகவனத்தில் இருக்கும் சீதையை அனுமன் சந்திக்கின்றான்.
சீதா தேவி அம்மையே! என்னோடு வாருங்கள். நான் உங்களை என் முதுகில் ஏற்றிக் கொண்டு செல்கிறேன் என்றான்.
அதற்கு சீதை மறுப்புத் தெரிவிக்கிறாள். அனுமனின் கோரிக்கைக்கு சீதை மறுப்புத் தெரிவிக்காவிடின் இராமாயணக் காப்பியம் அத்தோடு முடிந்திருக்கும். இலங்கையும் அழிவுற்றிருக்காது.
எனினும் அனுமனின் வேண்டுதலை சீதை நிராகரித்து விடுகிறாள். இந்த நிராகரிப்புக்கு காரணமும் கூறப்படுகிறது.
அசோகவனத்தில் இருக்கும் தன்னை அனுமன் காப்பாற்றிச் சென்றால் அது இராமரின் புகழுக்கு பங்கமாகும். எனவே தன்னை இராமரே மீட்க வேண்டும் என்பது சீதையின் சபதம்.
சீதையை இராமர் மீட்பது என்றால் நோர்வே தூதுவரா இராவணனோடு சமாதானப் பேச்சு நடத்த முடியும்? ஆக இராவணனை வதம் செய்தால் மட்டுமே அசோகவனத்தில் இருக்கும் சீதையை மீட்க முடியும்.
இராவணன் தன்னைக் கடத்திச் சென்ற தோசத்தை அனுமன் நீக்குவது முறையன்று.
அதனை தன் இராமனே நீக்கவேண்டும் என ஜனகன் மகள் நினைத்ததில் நிறையவே நியாயம் உள்ளது.
அதாவது இராவணனைக் கொன்றாக வேண்டும் என்று முடிவாகி விட்டால், சீதை இந்த முடிவைத் தவிர வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இவை ஒரு புறம் இருக்க, சீதையை மீட்பதற்கான போர் இலங்கையில் நடக்கிறது. போரில் இராவணேஸ்வரன் மாண்டு போகிறான். அவன் மாண்டதால் மண்டோதரியும் உயிர் விட்டாள்.
இவை நடந்த பின்னர் சிறையில் இருக்கும் சீதையை இராமரே சென்று அழைத்து வரவேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் நடக்கவில்லை.
சிறையில் இருக்கும் சீதையை அழைத்து வரும் படி இராமர் விபூஷணனிடமே கூறுகிறார். விபூஷணனே சீதையை அழைத்து வருகின்றான் என்பது இராமாயணக் கதை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பது என்று சந்திரிகா சபதம் செய்துள்ளார்.
இச் சபதத்தை பாண்டவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, மனோ கணேசன் என்ற ஐவரும் நிறைவேற்றியாக வேண்டும்.
அல்லது, இராமாயண நெறியில் விபூஷணன் என்ற மைத்திரிபால சிறிசேன, இங்கு சீதையாக உவமிக்கப்படும் சந்திரிகா, மகிந்தவின் ஆட்சியில் இழந்து போன கெளரவங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும்.
சபதங்கள் காப்பியங்களில் வென்றுள்ளன. இலங்கையில் எப்படி? என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
பெண்கள் சபதம் எடுத்தால் ஆண்கள் சும்மா இருப்பார்களா என்ன? திரெளபதியின் சபதத்தோடு பாண்டவர்களும் சபதம் எடுக்கின்றனர். அச் சபதமே குருசேத்திரப் போரும் கெளரவர்களின் தோல்வியுமாயிற்று.
பொதுவில் காப்பியங்கள், இதிகாசங்களில் இடம்பெற்ற யுத்தங்களின் பின்னணியில் சபதங்கள் இருந்துள்ளன.
அந்தச் சபதங்கள் வெற்றி பெற்றதான வரலாறுகளும் உண்டு. இராமாயணத்தில் அசோகவனத்தில் இருக்கும் சீதையை அனுமன் சந்திக்கின்றான்.
சீதா தேவி அம்மையே! என்னோடு வாருங்கள். நான் உங்களை என் முதுகில் ஏற்றிக் கொண்டு செல்கிறேன் என்றான்.
அதற்கு சீதை மறுப்புத் தெரிவிக்கிறாள். அனுமனின் கோரிக்கைக்கு சீதை மறுப்புத் தெரிவிக்காவிடின் இராமாயணக் காப்பியம் அத்தோடு முடிந்திருக்கும். இலங்கையும் அழிவுற்றிருக்காது.
எனினும் அனுமனின் வேண்டுதலை சீதை நிராகரித்து விடுகிறாள். இந்த நிராகரிப்புக்கு காரணமும் கூறப்படுகிறது.
அசோகவனத்தில் இருக்கும் தன்னை அனுமன் காப்பாற்றிச் சென்றால் அது இராமரின் புகழுக்கு பங்கமாகும். எனவே தன்னை இராமரே மீட்க வேண்டும் என்பது சீதையின் சபதம்.
சீதையை இராமர் மீட்பது என்றால் நோர்வே தூதுவரா இராவணனோடு சமாதானப் பேச்சு நடத்த முடியும்? ஆக இராவணனை வதம் செய்தால் மட்டுமே அசோகவனத்தில் இருக்கும் சீதையை மீட்க முடியும்.
இராவணன் தன்னைக் கடத்திச் சென்ற தோசத்தை அனுமன் நீக்குவது முறையன்று.
அதனை தன் இராமனே நீக்கவேண்டும் என ஜனகன் மகள் நினைத்ததில் நிறையவே நியாயம் உள்ளது.
அதாவது இராவணனைக் கொன்றாக வேண்டும் என்று முடிவாகி விட்டால், சீதை இந்த முடிவைத் தவிர வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இவை ஒரு புறம் இருக்க, சீதையை மீட்பதற்கான போர் இலங்கையில் நடக்கிறது. போரில் இராவணேஸ்வரன் மாண்டு போகிறான். அவன் மாண்டதால் மண்டோதரியும் உயிர் விட்டாள்.
இவை நடந்த பின்னர் சிறையில் இருக்கும் சீதையை இராமரே சென்று அழைத்து வரவேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் நடக்கவில்லை.
சிறையில் இருக்கும் சீதையை அழைத்து வரும் படி இராமர் விபூஷணனிடமே கூறுகிறார். விபூஷணனே சீதையை அழைத்து வருகின்றான் என்பது இராமாயணக் கதை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பது என்று சந்திரிகா சபதம் செய்துள்ளார்.
இச் சபதத்தை பாண்டவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, மனோ கணேசன் என்ற ஐவரும் நிறைவேற்றியாக வேண்டும்.
அல்லது, இராமாயண நெறியில் விபூஷணன் என்ற மைத்திரிபால சிறிசேன, இங்கு சீதையாக உவமிக்கப்படும் சந்திரிகா, மகிந்தவின் ஆட்சியில் இழந்து போன கெளரவங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும்.
சபதங்கள் காப்பியங்களில் வென்றுள்ளன. இலங்கையில் எப்படி? என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
வலம்புரி-

0 comments:
Post a Comment