• Latest News

    December 03, 2014

    பொன்சேக்கா முகம் கொடுத்ததை விட அதிக விளைவுகளை தாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன

    பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
    சரத் பொன்சேக்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை, அரசாங்கக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தாம் மிகுந்த மன வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

    அதுகுறித்து தம்மால் எதுவும் செய்ய முடியாது போனதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது.

    எது எவ்வாறு இருப்பினும் பொன்சேக்கா முகம் கொடுத்ததை விட அதிக விளைவுகளை தாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இங்கு தொடர்ந்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன கூறினார்.

    எனினும் கோழைபோல் வாழ்வதை விட உண்மைக்காக உயிரை பணயம் வைப்பது மேல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொன்சேக்கா முகம் கொடுத்ததை விட அதிக விளைவுகளை தாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top