• Latest News

    December 14, 2014

    காணி விற்று கட்சி அமைத்தார் பண்டாரநாயக்க! கட்சியை விற்று காணி வாங்கும் மஹிந்த!

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் S.W.R.D.பண்டாரநாயக்க காணிகளை விற்று கட்சியை மேம்படுத்தினார். எனினும் தற்போதைய கட்சியின் தலைவர் கட்சியை விற்று காணி கொள்வனவு செய்கின்றார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் பண்டாரநாயக்க ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்து கட்சியை உருவாக்கினார். அவ்வளவு அர்ப்பணிப்பு செய்தே கட்சி உருவாக்கப்பட்டது.

    இந்த நிலைமையை இந்த அரசியல் நடவடிக்கையை நாம் அனுமதிக்க மாட்டோம்.

    ஊழல் மோசடிகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை நாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதிக்க முடியாது.

    பொது வேட்பாளர் மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்து நாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சிலாபம் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    TW-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காணி விற்று கட்சி அமைத்தார் பண்டாரநாயக்க! கட்சியை விற்று காணி வாங்கும் மஹிந்த! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top