• Latest News

    December 04, 2014

    தர்ம ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்கும் பய­ணத்­தி­லி­ருந்து ஜாதிக ஹெல உறு­மய தடம் புரண்­டுள்ளது: எல்­லா­வெல தேரர்

    தர்ம ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்கும் பய­ணத்­தி­லி­ருந்து தடம் புரண்­டுள்ள ஜாதிக ஹெல உறு­மய இன்று செய்­நன்றி மறந்து நாட்­டுக்கு எதி­ரான சதி­கார கூட்­டத்­திற்கு துணை போகின்­றது எனக் குற்றம் சாட்டும் முன்னாள் ஹெல உறு­ம­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எல்­லா­வெல மேதா­னந்த தேரர் உண்­மை­யான ஹெல உறு­ம­யவும் நாங்­களும் இத்­தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிப்­ப­தற்கு ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்ளோம் என்றும் தேரர் தெரி­வித்தார்.

    பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் உள்ள மிஹிலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற நாளைக்கு ஒரு நாடு என்ற அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே எல்­லா­வெல மேதா­னந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

    தேரர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்இ நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து அனைத்து இன மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழும் சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யவர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ. சிங்­கள பௌத்­தர்­களின் பாது­காப்­பிற்கு உத்­த­ர­வா­த­ம­ளித்­தவர்.

    எனவே நாம் செய்­நன்றி மற­வா­த­வர்­க­ளாக தர்­மத்தின் வழி நடப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். இந் நாட்டில் தர்ம ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்கும் உய­ரிய கொள்­கை­யு­ட­னேயே ஜாதிக ஹெல உறு­மய உரு­வாக்­கப்­பட்­டது. இன்று அந்த உய­ரிய நோக்­கத்தை ஹெல உறு­ம­யவின் சிலர் கைவிட்டு பிழை­யான பாதையில் பய­ணிக்­கின்­றனர்.

    அத்­தோடு இன்று ஹெல உறு­ம­ய­வுக்குள் கருத்து மோதல்கள்இ முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ளன. ஒரு கூட்டம் சதி­கா­ரர்­களின் பொது அணி பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க தீர்­மானம் எடுத்­துள்­ளது.

    ஆனால் உண்­மை­யான ஜாதிக ஹெல உறு­ம­யவைச் சேர்ந்­த­வர்கள் இதனை எதிர்க்­கின்­றனர். அவர்கள் செய்­நன்றி மற­வா­த­வர்கள். எனவே நாட்டை ஒன்­று­ப­டுத்­திய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிக்க தீர்­மா­னித்து விட்­டனர்.

    எதிர்­கா­லத்தில் உண்­மை­யான நாட்டை மக்­களை நேசிக்கும் உண்­மை­யான ஹெல உறு­ம­ய­வினர் எம்­மோடு இணை­வார்கள். நிச்­சயம் தர்மம் வெல்லும். ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்­நாட்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாவார் என்றும் எல்­லா­வெல மேதா­னந்த தேர் தெரி­வித்தார்.

    இங்கு தென­கம தம்­மா­னந்த தேரர் கருத்து தெரிவிக்கையில், சர்­வா­தி­கா­ரத்தை ஒழிப்­ப­தாக பேசும் அத்து­ர­லியே ரத்ன தேரர் இன்று ஹெல உறு­ம­ய­வுக்குள் ஓர் சர்­வா­தி­கா­ரி­யாக செயற்­பட்டு வரு­கிறார். தன்­னிச்­சை­யான முடி­வு­களை எடுத்து தர்­ம­ராஜ்­ஜியம் என்ற உய­ரிய கொள்­கையை தூக்­கி­யெ­றிந்து விட்டு எவ­ரது தேவையை நிறை­வேற்­று­வ­தற்­காக தூய்­மை­யான நாளை என்ற இயக்­கத்தை ஆரம்­பித்­துள்ளார். ஹெல உறு­ம­யவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்­கிறார்.

    பிர­பா­க­ரனின் பிறந்த நாளுக்கு பிஸ்­டலை பரி­சாக வழங்­கிய ரணில் தலை­மை­யி­லான கூட்­ட­ணியை ஆதரிக்கின்றார். இது எந்த விதத்தில் நியாயமாகும்? ரத்ன தேரர் தர்மத்தின் பாதையில் பயணிக்கவில்லை. குரோத அரசியலை முன்னெடுக்கின்றார்.

    இதனை தோல்வியடையச் செய்வோம். தர்மத்தை பாதுகாப்போம் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் பல பௌத்த குருமாரும் கலந்து கொண்டார்கள்.LM
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தர்ம ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்கும் பய­ணத்­தி­லி­ருந்து ஜாதிக ஹெல உறு­மய தடம் புரண்­டுள்ளது: எல்­லா­வெல தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top