• Latest News

    February 22, 2015

    மகிந்த ராஜபக்ச, இ.போ.சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவை 1425 லட்சம் ரூபா! - போக்குவரத்து அமைச்சர்

    கடந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திய, இ.போ.ச பஸ் வண்டிகளுக்கு இதுவரையில் கட்டணங்கள் செலுத்தவில்லை  என போக்குவரத்து விவகார அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
    1425 லட்சம் ரூபா பணம் இ.போ.சபைக்கு கட்டணமாக செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    இதேவேளை, பெலியத்த – மாத்தறை ரயில் பாதைக்கு ஏற்பட்டுள்ள செலவுகளைப் பார்க்கும் போது அப்பாதையினை தங்கத்தினால் செய்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 
    ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதை அமைப்பதற்கு 10 பில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
    அப்பாதையின் அமைப்புக்கு மொத்தமாக 276 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
    இந்த பாதையின் மொத்த தூரம் 27 கிலோ மீட்டர்களாகும்.
    இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்து ஆராய்வதற்கு போக்குவரத்து அமைச்சினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகிந்த ராஜபக்ச, இ.போ.சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவை 1425 லட்சம் ரூபா! - போக்குவரத்து அமைச்சர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top