தொகுதிவாரி
தேர்தல் முறையை அல்லது பெரும்பான்மை தேர்தல் முறையை மையமாக கொண்ட தேர்தல்
சீர்திருத்த முறைக்கு சிறுபான்மைக் கட்சிகளான , ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
தேசிய தொழிலாளர் சங்கம்,மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் பல
எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் சகல அரசியல் கட்சிகளுக்கும் நியாயமான,
ஒரு தேர் தல் முறைமையை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளன.
இவ்வாறான புதிய தேர்தல் முறைமைக்கு
எதிராக சிறுபான்மை கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளமையினால்
எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய தேர்தல் முறைப்படி நடத்த
முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்படும்
அதிகாரங்களைக் குறைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும்
நிலை காணப்படுகின்றது. அதேபோன்று தற்போதுள்ள தேர்தல் முறைமையினை
மாற்றுமாறும் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
எனவே, இந்த தேர்தல் முறைமையினை மாற்றி
சகல கட்சிகளுக்கும் நியாயம் கிடைக்கும் வகையிலான தேர்தல்
முறைமையொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிச்சயமாக
அறிமுகப்படுத்தும். ஆனால், அது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு
முன்னர் மேற்கொள்ள முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாதுள்ளது.
அநேகமாக எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போது நடைமுறையிலுள்ள முறைப்படியே
நடக்கும் சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசார
தேர்தல் முறையே சிறுபான்மையினர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்ற
சாதகாமான முறையை கொண்டுள்ளதுடன் பெருன்பான்மை முறை அல்லது தொகுதிவாரி
தேர்தல் முறை சிறுபான்மையினர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை
குறைத்துவிடும் ஆபத்து கொண்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
விகிதாசார தேர்தல் முறையில் குறைபாடுகள்
உள்ளபோதும் அதனை சீரமைக்கும்போது , அதில் உள்ள சிறுபான்மை மற்றும் சிறிய
கட்சிகளுக்காண நன்மைகளையும் அகற்றிவிடுவது ஏற்றுகொள்ள முடியாததாகும்

0 comments:
Post a Comment