• Latest News

    February 22, 2015

    தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பங்கேற்கப் போவதில்லை: சுதந்திரக் கட்சி

    தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
    அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தை கண்காணிக்கும் நோக்கில் தேசிய நிறைவேற்றுப் பேரவை நிறுவப்பட்டுள்ளது.
    இந்த நிறைவேற்றுப் பேரவையில் பங்கேற்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
    எதிர்வரும் வாரத்தில் நிறைவேற்றுப் பேரவையில் தமது கட்சி அங்கம் வகிக்கும் என சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களில் உண்மையில்லை.
    ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் தேவைக்கு ஏற்பவே தேசிய நிறைவேற்றுப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
    தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்கும் இதுவரையில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என அனுரபிரிதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
    சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பங்கேற்கப் போவதில்லை: சுதந்திரக் கட்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top