கடந்த சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாடாளுமன்றத்திற்கு அருகில் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் போது ஜனாதிபதி உட்பட பிரதம அதிதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறித்து கடந்த வாரம் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
1981 ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத் கொலை செய்யப்பட்டது போல் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாத், அணி வகுப்பு மரியாதை அவதானித்து கொண்டிருந்த போது அணி வகுப்பில் கலந்து கொண்ட இராணுவ அணி ஒன்று தமது வாகனங்களில் இருந்து இறங்கி ஜனாதிபதி மற்றும் பிரதம அதிதிகளை சுட்டுக்கொன்றது.
இவ்வாறான தாக்குதல் ஒன்று சுதந்திர தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புச் செயலாளர் பீ.எம்.யு.டி. பஸ்நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தார்.
அப்படியான தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை அடக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பாதுகாப்பு முக்கியஸ்தர்களை அழைத்து சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் அரச தரப்பினர் நடத்தியிருந்தனர்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தைகளில் விரிவாக ஆராயப்பட்டதாக இது பற்றி தகவலை வழங்கிய அரச தரப்பு வட்டாரம் கூறியுள்ளது.
யாரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது. தாக்குதலை திட்டமிட்டது யார் ஆகிய முக்கியமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
தகவல் நம்பிக்கை தரக் கூடிய மட்டத்தில் இருந்து கிடைத்ததாக கூறியுள்ள அந்த வட்டாரம் மேதிலக தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.
தகவல் கிடைத்த தினத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சுதந்திர தினத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திட்டமிட்டு வந்தனர்.
ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வை எளிமையாக கொண்டாட தீர்மானித்ததை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளும் சுலமானதாக கூறப்படுகிறது.
முன்னைய அரசாங்கம், மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான வீரக்கெட்டியவில் இம்முறை சுதந்திர தினத்தை நடத்த திட்டமிட்டிருந்ததுடன் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த திட்டதை மாற்றினார்.
.jpg)
0 comments:
Post a Comment