உயர்ந்த மட்ட பொருப்புக்கூறல் ,மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் ஊழலுக்கு எதிராக போராடுதல் உள்ளிட்ட வற்றை மேற்கொள்வதற்கு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறந்த சந்தர்பத்தை இலங்கைக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவத்துள்ளார்
அதேவேளை புதிய இலங்கையானது ஒற்றுமை பன்முகத்தன்மை கலாசார மற்றும் மத பன்முகத்தன்மை பல்லினத்தன்மை போன்றவை புதிய இலங்கையின் மைல்கற்களாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அந்நாட்டின் இராஜாங்க செயலர் ஜோன் கெரி நேற்று முன்தினம் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவை இலங்கை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை என்றும் அமெரிக்காவை ஒரு வாய்ப்பாகவே பார்ப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்தில் நல்லிணக்கத்துக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் அமெரிக்க நேரப்படி பிற்பகல் இரண்டு மணியளவில் வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜோன் கெரி
இதன்போது முதலில் கருத்து வெளியிட்ட அமெரிக்கா இராஜாங்க செயலர் ஜோன் கெர்ரி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அமெரிக்காவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இது முக்கியத்துமிக்க தருணமாகும். கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களிக்கப்பட்டது. இலங்கை புதிய வழியில் பயணிப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கினர்.
இந்த மாற்றமானது உயர்ந்தமட்ட பொறுப்புக்கூறல் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் ஊழலுக்கு எதிராக போராடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பங்களை திறந்துவிட்டுள்ளது. மக்களுக்காக பேசும் அரசாங்கம் உருவாகுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் நாங்கள் ஆச்சரியமடைகின்றோம். அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாங்கள் வாழ்த்துகின்றோம்.
மேலும் அமைதியான மற்றும் சிறந்த எதிர்காலத்துக்காக 30 வருட யுத்தத்திலிருந்து இலங்கை அரசாங்கம் எவ்வாறு வெளிவரப்போகின்றது என்பது தொடர்பில் நாங்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றோம். அந்தவகையில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் வேலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.
சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிடுகையில்
இலங்கையில் ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நான் இங்கு வந்துள்ளேன். அந்தவகையில் நாங்கள் 100 நாள் இலட்சிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஜனநாயக மறுசீரமைப்பு அரசியலமைபபு திருத்தங்கள் என்பனவற்றை முன்னெடுக்கவுள்ளோம். மேலும் நல்லிணக்கத்துக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளோம். புதிய இலங்கையானது ஒற்றுமை பன்முகத்தன்மை கலாசார மற்றும் மத பன்முகத்தன்மை பல்லினத்தன்மை போன்றவை புதிய இலங்கையின் மைல்கற்களாக இருக்கும்.
அமெரிக்காவுடன் கடந்த பல தசாப்தங்களாக எங்களுக்கு காணப்பட்ட உறவை மேலும் பலப்படுத்துவதற்கு நாங்கள் செயற்படவுள்ளோம். கடந்த சில வருடங்களில் இலஙகைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சில பாதிப்புக்கள் ஏற்பட்டன. எனவே இரண்டுநாடுகளுக்கு இடையலான உறவை மீண்டும் கட்டியெழுப்புவது எனது கடமையாக நான் உணர்கின்றேன். எனவே அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெர்ரியுடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன். அமெரிக்காவுடன் உறவை கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்றேன். எமது புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் அல்ல. அதற்கு மாறாக அமெரிக்கா எமககு சிறந்த சந்தர்ப்பமாகும் என்றார்.
இதேவேளை இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவை இலங்கை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை என்றும் அமெரிக்காவை ஒரு வாய்ப்பாகவே பார்ப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்தில் நல்லிணக்கத்துக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் அமெரிக்க நேரப்படி பிற்பகல் இரண்டு மணியளவில் வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜோன் கெரி
இதன்போது முதலில் கருத்து வெளியிட்ட அமெரிக்கா இராஜாங்க செயலர் ஜோன் கெர்ரி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அமெரிக்காவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இது முக்கியத்துமிக்க தருணமாகும். கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களிக்கப்பட்டது. இலங்கை புதிய வழியில் பயணிப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கினர்.
இந்த மாற்றமானது உயர்ந்தமட்ட பொறுப்புக்கூறல் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் ஊழலுக்கு எதிராக போராடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பங்களை திறந்துவிட்டுள்ளது. மக்களுக்காக பேசும் அரசாங்கம் உருவாகுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் நாங்கள் ஆச்சரியமடைகின்றோம். அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாங்கள் வாழ்த்துகின்றோம்.
மேலும் அமைதியான மற்றும் சிறந்த எதிர்காலத்துக்காக 30 வருட யுத்தத்திலிருந்து இலங்கை அரசாங்கம் எவ்வாறு வெளிவரப்போகின்றது என்பது தொடர்பில் நாங்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றோம். அந்தவகையில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் வேலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.
சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிடுகையில்
இலங்கையில் ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நான் இங்கு வந்துள்ளேன். அந்தவகையில் நாங்கள் 100 நாள் இலட்சிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஜனநாயக மறுசீரமைப்பு அரசியலமைபபு திருத்தங்கள் என்பனவற்றை முன்னெடுக்கவுள்ளோம். மேலும் நல்லிணக்கத்துக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளோம். புதிய இலங்கையானது ஒற்றுமை பன்முகத்தன்மை கலாசார மற்றும் மத பன்முகத்தன்மை பல்லினத்தன்மை போன்றவை புதிய இலங்கையின் மைல்கற்களாக இருக்கும்.
அமெரிக்காவுடன் கடந்த பல தசாப்தங்களாக எங்களுக்கு காணப்பட்ட உறவை மேலும் பலப்படுத்துவதற்கு நாங்கள் செயற்படவுள்ளோம். கடந்த சில வருடங்களில் இலஙகைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சில பாதிப்புக்கள் ஏற்பட்டன. எனவே இரண்டுநாடுகளுக்கு இடையலான உறவை மீண்டும் கட்டியெழுப்புவது எனது கடமையாக நான் உணர்கின்றேன். எனவே அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெர்ரியுடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன். அமெரிக்காவுடன் உறவை கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்றேன். எமது புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் அல்ல. அதற்கு மாறாக அமெரிக்கா எமககு சிறந்த சந்தர்ப்பமாகும் என்றார்.

0 comments:
Post a Comment