• Latest News

    February 25, 2015

    சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்ற அச்சத்தில் நல்லாட்சியை குழப்புகின்றனர் : பிர­தமர் ரணில்

    தேசிய அரசாங்கம்  அமைக்கப்பட்டால் பலரின் ஊழல் மோச­டிகள் வெளிவரலாம் சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்ற அச்சத்தில் நல்லாட்சியை குழப்புகின்றனர் என்ற அச்­சத்தினாலேயே நல்­லாட்­சிக்­கான எமது அர­சுக்கு எதி­ராக சிலர் நாட்­டுக்குள் குழப்­பங்­களை ஏற்ப­டுத்த முயற்­சிப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக வியா­ழக்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பிர­தமர் தெரி­வித்தார்.

    அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்­பாக பௌத்த குரு­மா­ருக்கு தெளி­வு­ப­டுத்தும் கலந்­து­ரை­யாடல் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இந் நிகழ்வில் உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

    பிர­தமர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
    புதிய அர­சாங்கம் பொறுப்பேற்று குறு­கிய கால எல்­லைக்குள் அரச ஊழி­யர்­க­ளுக்கு ரூபா 5,000 சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டது மட்­டு­மன்றி இடைக்­கால வரவு – செலவுத் திட்டம் மூலம் மக்­களின் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களை குறைத்­த­தோடு பல்­வேறு சலு­கை­களை வழங்­கினோம். இன்று வரை அர­சாங்­கத்தின் செல­வுகள் எவ்­வ­ளவு என்­பதை எம்மால் கண்­டு­கொள்ள முடி­யா­துள்­ளது.

    நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்­கான சட்ட மூலத்தின் நகல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஊழல் மோச­டி­களை ஒழிப்­ப­தற்­காக விசேட செய­லணிக் குழு நிறு­வப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு எமது நூறு நாள் வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எஞ்­சிய திட்­டங்கள் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நாளை வியா­ழக்­கி­ழமை நான் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளேன்.

    இது­வ­ரையில் நிறை­வேற்று அதி­கார ஒழிப்பு, அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியோ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ எத­னையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை இவ்­வி­டயம் தொடர்­பாக சுதந்­திரக் கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளோம்.

    தேசிய அர­சாங்கம் மற்றும் நல்­லாட்சி தொடர்­பான அரசின் நட­வ­டிக்­கை­களை சிலர் எதிர்க்­கின்­றனர். ஏனென்றால் அவர்­க­ளது ஊழல் மோச­டிகள் வெளியே வரலாம். இதனால் விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுக்க நேரி­டலாம். சிறை செல்ல வேண்டி வரும் போன்ற அச்சம் கார­ண­மா­கவே நல்­லாட்­சியை எதிர்க்­கின்­றனர்.

    இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் நல்­லாட்­சிக்­கான எமது நூறு நாள் திட்­டங்­களை முழு­மை­யாக நிறை­வேற்­றுவோம். குறை­பா­டுகள் இருக்­கலாம். ஆனால், எமது இலக்கை பூர்த்தி செய்வோம். இதன் பின்னர் ஏப்ரல் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­ததை நடத்­துவோம்.

    ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மட்டும் அனைத்­தையும் நிறை­வேற்ற முடி­யாது. மத­கு­ருமார் மற்றும் மக்­க­ளி­னதும் ஆத­ரவு எமக்கு தேவை. அரசர் ஆட்­சிக்கும் குடும்ப ஆட்­சிக்கும் நாம் முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளோம். இன்­றி­ருப்­பது அரசர் ஆட்­சி­யல்ல மக்கள் புரட்­சியால் ஏற்­பட்ட மக்­க­ளாட்­சி­யாகும்.

    கடந்த காலங்­களில் இனங்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இதனை எதிர்த்து நாட்டில் இனங்­க­ளி­டையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மார்ச் மாதம் இன நல்­லி­ணக்க மாநா­டொன்றை நடத்­த­வுள்ளோம்.

    கடந்த ஆட்­சி­யா­ளர்கள் நாட்­டுக்குள் என்­னென்ன அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஆரம்­பித்­தார்கள். அதன் செல­வுகள் தொகை என்ன என்ற விட­யங்கள் தொடர்­பான பதி­வுகள் எதுவும் கிடை­யாது. தற்­போது அவை தொடர்­பாக ஆராய்ந்து வரு­கின்றோம். அத்­தோடு பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு இன்று பில்­லியன் கணக்கில் பணத்தை கேட்­கின்­றனர்.

    அலரி மாளி­கைக்­குள்ளும் பல்­வேறு குட்டி அரண்­ம­னைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. நாடு பூராவும் இது போன்ற அரண்­ம­னைகள் பல காணப்­ப­டு­கின்­றன. இவற்றை யார் நிர்­மா­ணித்­தார்கள்? யாருக்கு சொந்தம் என்­ப­தையும் தேடிப்­பார்க்கும் நிலை தலை­தூக்­கி­யுள்­ளது.

    அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மாக உள்ள வாக­னங்­களின் தொகை எவ்­வ­ளவு என்ற தர­வு­களும் இல்லை. இது தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கே தெரி­யா­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி பாவித்த வாக­னங்­களின் தொகை எவ்­வ­ளவு என்­பதும் தெரி­ய­வில்லை.

    கடந்த ஆட்சியாளர்கள் தேசியம் மரபுரிமை பற்றி பேசினார்கள். ஆனால், தொல்பொருளியல் திணைக்களத்தில் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் மட்டும் அதிகாரிகளுக்கான 53 வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாதுள்ளது.

    இந்த நிலையில் எவ்வாறு இலஞ்ச ஊழல் விசாரணைகளை துரிதப்படுத்த முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.-VK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்ற அச்சத்தில் நல்லாட்சியை குழப்புகின்றனர் : பிர­தமர் ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top