• Latest News

    April 30, 2015

    மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம்

    மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
    மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பாரிய நிதி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
    4500 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு நபர் மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு பொருத்தமற்றவர் என தெரிவித்து குற்றப் பிரேரணை யோசனையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
    இந்த யோசனையில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
    இந்த ஆவணம் சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் விரைவில் அர்ஜூன் மகேந்திரனை பதவி விலக்க முடியும் என எதிர்பார்ப்பதாகத் தெரிpத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top