• Latest News

    April 30, 2015

    சந்திரிக்காவுக்கு எதிராக வாசுதேவ மற்றும் விமல் முறைப்பாடு

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
    லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று காலை சென்ற இவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
    முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் காணி ஊழல் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இந்த காணி ஊழல் சம்பந்தமாக வாசுதேவ நாணயக்கார 2007 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும் அது துரிதமாக விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.
    இந்த ஊழல் சம்பந்தமாக இன்று லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்ததாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சந்திரிக்காவுக்கு எதிராக வாசுதேவ மற்றும் விமல் முறைப்பாடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top