• Latest News

    August 13, 2015

    பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா –படங்கள்.

     (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அடங்கிய பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 12-08-2015 புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
     
    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
     
    இங்கு நூல் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமாரும், நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரபும், சிறப்புரையை தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில்வேலவரும் நிகழ்த்தினர்.
     
    இதன் போது பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூலின் முதற்பிரதியை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றஸ்மி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைத்தார்.
     
    மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதிகள்,ஊர் பிரமுகள்,ஊடகவியலாளர்கள் ,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா –படங்கள். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top