• Latest News

    August 21, 2015

    எந்த வழியிலாவது மஹிந்தவை மீண்டும், அதிகாரத்தில் அமர்த்துவதில் சீனா தீவிர கரிசனை

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக சீனா தீவிர கரிசனையுடன் செயற்படுவதாக இந்துஸ்தான் டைம்ஸ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லியின் கொள்கை ஆய்வுமைய பேராசிரியர் பிரஹ்மா செலானி இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

    நேற்றைய இந்துஸ்தான் டைம்ஸ் இணையப் பதிப்பில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

    அக்கட்டுரையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    இலங்கையில் சீனா பாரிய நிதிமுதலீட்டில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இவை அனைத்தும் சீனாவின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டதாகும்.

    இலங்கையில் சீனாவின் முதலீடுகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கு ராஜபக்ஷவினர் மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பது சீனாவின் எதிர்பார்ப்பாகும்.

    அதற்காக கடந்த காலத்தில் 11.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவின் முக்கிய அரச நிறுவனம் ஒன்றினூடாக ராஜபக்ஷ தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

    எந்த வழியிலாவது மஹிந்தவை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதில் சீனா தீவிர கரிசனை கொண்டுள்ளது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எந்த வழியிலாவது மஹிந்தவை மீண்டும், அதிகாரத்தில் அமர்த்துவதில் சீனா தீவிர கரிசனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top