• Latest News

    August 15, 2015

    ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி திட்டம்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் "B" திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    எதிராளிகள் செயற்படும் வாய்ப்பு குறைந்த நேரத்தை தெரிவு செய்து, ஜனாதிபதி தனது திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை பெற ஜனாதிபதி முயற்சித்திருந்தால், கட்சியை உடைத்து கொண்டு வெளியேறி தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலத்தை குறைக்க மகிந்த ராஜபக்ச அணி திட்டமிட்டிருந்தது.

    இவ்வாறான சூழ்நிலையில், தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியை பெறும் என்பதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடும் வீழ்ச்சியை சந்திக்கும். இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் தருவாயில் தனது பீ திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

    சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்களை நீக்கியது மாத்திரமல்லாது, அவர்களை கட்சியின் அங்கத்துவத்தில் இருந்தும் ஜனாதிபதி நீக்கியுள்ளார்.

    இதன் மூலம் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் ஜனாதிபதியின் திட்டம் தெளிவாகியுள்ளது. இதற்கு எதிராக மகிந்த ராஜபக்ச அணி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பிருந்த போதிலும் தேர்தல் முடிவுகளின் பின்னர், ஜனாதிபதி மேலும் பலமடைவார் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top