• Latest News

    August 20, 2015

    சஷி வீரவன்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

    அதற்கமைய சற்று நேரத்திற்கு முன்னர் சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

    இதேவேளை தேர்தல் நிறைவடையும் வரையில் அரசியல்வாதிகள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட கூடாதென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஷி வீரவன்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top