
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி
தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அலகபெருமவுக்கு அமைச்சரவை
அமைச்சர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு
உறுப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ராஜபக்ச ஆட்சியில் இருந்து 100 நாள் அரசாங்கத்தில் அமைச்சு பதவி
பெற்றுகொண்டு மீண்டும் ராஜபக்ச தரப்பில் இணைந்து கொண்ட பவித்ரா
வன்னியாராச்சி இந்த நாட்களில் மிகவும் அமைதியாக செயற்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கூட்டங்கள் மற்றும்
நிகழ்வுகளில் கலந்து கொள்வதனை தவிர்க்கும் அவர் அரசாங்கத்தில் இணைந்து
அமைச்சு பதவி பெற்றுகொள்வதற்கு ஆயத்தமாகுவதாக குறிப்பிடப்படடுகின்றது.
வரவு செலவு வாக்களிப்பின் போது இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும்,
இந்த இருவருக்கும் மேலதிகமாக ராஜபக்ச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
குணவர்தன என்ற ஒருவரும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment