• Latest News

    November 29, 2015

    சாய்ந்தமருதில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியும் கோலாகலமாக ஆரம்பம்

    -எம்.வை.அமீர் -
    கிழக்குமாகாணத்தில் முதல் தடவையாக Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்குபற்றுதலுடன் Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் 2015-11-27 ல் சாய்ந்தமருது  லீ மெரீடியன் மண்டபத்தில் ஆரம்பமானது.
    சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். கௌரவ அதிதியாக சிரேஷ்ட கட்டிடக்கலை நிபுணர் அல் ஹாஜ் எம்.ஐ.எம்.இஸ்மாயில் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.
    Knowledge Force நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் அவர்களது கண்காணிப்பிலும் வழிநடத்தலிலும் ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கையில் புகழ்பெற்ற புத்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தொழில் வழிகாட்டி அமைப்புக்கள் வங்கிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தங்களது கட்சி மையங்களையும் வழிகாட்டல் அலுவலகங்களையும் அமைத்துள்ளன.
    எதிர்வரும் 2015-11-29 வரை இடம்பெறவுள்ள இக்கண்காட்சி மாணவர்களுக்கும் உயர்கல்வியை தொடரவுள்ளவர்களுக்கும் தொழிலைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் சிறந்த புத்தகங்களுடன் உறவாடவுள்ளவர்களுக்கும் கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் The biggest education, Job & Book Fair in the Eastern Province of Srilanka   எனும் தலைப்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெறும் இக்கண்காட்சி வரப்பிரசாதமாக அமையும்.

     


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியும் கோலாகலமாக ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top