• Latest News

    August 23, 2016

    பொன்னன் வெளி காணி விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். -மகஜர் கையளிப்பு

    அம்­பாறை, ஒலுவில் பிர­தேச மக்­களின் ஆக்­கி­ரமிக்கப்பட்ட 600 ஏக்கர் பொன்னன் வெளிக் காணிக்­கான உரிய தீர்­வினைப் பெற்­றுத்­தர வேண்­டு­மென பொன்­னன்வெளிக்­கண்ட விவ­சா­யிகள் சங்கம் நல்­லி­ணக்க பொறி­மு­றைகள் செய­ல­ணி­யிடம் மகஜர் கையளித்­துள்­ளது. இம்­ம­க­ஜரில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 1987ஆம் ஆண்டு தீக­வாபி புனித பிர­தே­ச­மாக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இப்­பி­ர­தே­சத்­தில் புதி­தாக குடி­யேற்றம் செய்­யப்­பட்ட மாத்­தறை, அம்பாந்­தோட்டை, காலி ஆகி­ய ­மா­வட்­டங்­களைச் சேர்ந்த சிங்­கள மக்கள் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அபகரித்துள்ளதுடன் அங்கு விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் விவசாயிகளையும் துரத்தியடித்தனர்.
    ஒலுவில் முஸ்லிம் விவ­சா­யி­க­ளினால் 1940 ஆம் ஆண்டு இப்பகுதி துப்புரவு செய்யப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
    1950ஆம் ஆண்­ட­ு கல்­லோயா அபி­வி­ருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 80 விவ­சா­யி­க­ளுக்கு காணி உத்­த­ரவுப் பத்­தி­ரங்கள் வழங்­கப்­பட்­டன. இதனைத் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த விவ­சா­யி­க­ளுக்கு காணிக்­கச்­சேரி நடத்­தப்­பட்டு 1974ஆம் ஆண்டு அப்­போ­தி­ருந்த அர­சாங்க அதி­பரால் 150 விவ­சா­யி­க­ளுக்கு உத்­த­ர­வுப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டது.
    1987 இல் தீக­வாபி புனித பிர­தே­ச­மாக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இப்­பி­ர­தே­சத்­திற்கு புதி­தாக மாத்­தறை, அம்பாந்­தோட்டை, காலி ஆகி­ய­ மா­வட்­டங்­களில் இருந்து சிங்­கள மக்கள் மீளக்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களால் முஸ்லிம்களின் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன.
    இது தொடர்பில் நீதி­மன்­றத்தில் குறிப்­பிட்ட சில முஸ்லிம் விவ­சா­யி­களால் வழக்­குத்­தாக்கல் செய்­யப்­பட்டு முஸ்லிம் விவ­சா­யிகள் சார்பில் தீர்வும் வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் இத்­தீர்ப்பைப் பயன்­ப­டுத்தி விவ­சாயக் காணிக்குள் முஸ்லிம் விவ­சா­யிகள் உட்­பி­ர­வே­கிக்க முடி­யாது தமன பொலிஸார் தொடர்ந்தும் அச்­சு­றுத்தி வரு­வ­தோடு முஸ்லிம் விவ­சா­யி­களைக் கைது செய்து புனித பிர­தே­சத்­திற்குள் புதை­பொருள் அகழ வந்தோர் என ­பொய்­யாக வழக்குத் தாக்கல் செய்து சிறையில் அடைத்­து­முள்­ளனர். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
    குறிப்பாக இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய அணு­கு­முறை அர­சினால் பின்­பற்றப்படல் வேண்டும். அர­சியல் பக்­கச்­சார்­பற்ற ஆட்­சி­முறை கொண்­டு­வரப் படல் வேண்டும். பரம்­பரை பரம்­ப­ரை­யாக ஆட்சி செய்து வந்த காணி­களை சுவீ­க­ரிக்­காமல் அக்­கு­றிப்­பிட்ட மக்­க­ளிடம் ஒப்­ப­டைத்தல் வேண்டும். இக்காணிப் பிரச்சினைக்கு தனியான சிறப்பு நீதிமன்றம் அமைத்துத் தரவேண்டும். எங்களால் இழக்கப்பட்ட பொன்னன்வெளிக் கண்ட காணிகளை மீளவும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் அல்லது இக் காணியின் தற்போதைய பெறுமதியில் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொன்னன் வெளி காணி விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். -மகஜர் கையளிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top