• Latest News

    August 21, 2016

    தமிழ் பேசும் சமூகங்கள் மனம் விட்டுப் பேசாமல் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது

    சிறு­பான்மை சமூ­கங்கள் அதுவும் வடக்கு கிழக்கில் மிகப் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற, வாழப்­போ­கின்ற இரண்டு தமிழ்­பேசும் சமூ­கங்­களும் இதய சுத்­தி­யுடன் தனி­யான கூட்­ட­மைப்­பு­க­ளாக உருப்­பெற்று மனம் விட்டு பேச­வேண்டும். அவ்­வா­றான ஒரு சம­ரசப் பேச்சு இல்­லாமல் ஒரு நிரந்­தரத் தீர்வை எம்மால் பெற்றுக் கொள்ள முடி­யாது. தமிழ் முஸ்லிம் சமூ­க­ங்களை திருப்­திப்­ப­டுத்­தாத எந்த ஒரு தீர்வுத் திட்­டமும் நிரந்­தர சமா­தா­னத்தைக் கொண்­டு­வரப் போவ­தில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான எம்.ரி.ஹச­னலி வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

    அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கி­றது.

    கேள்வி: இலங்­கையில் இன ஒற்­றுமை யினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு பூர­ண­மான தீர்வுத் திட்டம் அமையும் சாத்­தியம் பற்றி உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன?

    பதில்: அர­சி­யல்­வா­தி­களின் பெருந்­தன்­மை­யில்தான் இது தங்­கி­யுள்­ளது. இவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் மற்­ற­வரின் உரி­மை­யையும், கௌர­வத்­தையும், மதிப்­ப­வர்­க­ளா­கவும் உள்­ளதைப் பகிர்ந்து கொள்ளும் மனப்­பாங்­கை­யு­டை­ய­வர்­க­ளா­கவும், சக­வாழ்வின் கன­தி­யான பெறு­மா­னத்தின் மகத்­து­வத்தை மிகுந்த விட்டுக் கொடுப்­புடன் கடைப்­பி­டிப்­ப­வர்­க­ளா­கவும் தம்மை மாற்றிக் கொள்ள முடி­யு­மென்றால் பூர­ண­மான தீர்வுத் திட்­டத்தை எட்­டி­ வி­டலாம்.

    நமது அனைத்து மதங்­களும் இந்த உய­ரிய பண்­பு­க­ளைத்தான் போதிக்­கின்­றன. இந்த நாட்டில் வாழும் நல்­ல­வர்­களும் இதைத்தான் விரும்­பு­வார்கள். ஆனால் நல்­ல­வர்கள் எல்­லோரும் நாட்டில் எண்­ணிக்­கையில் தாரா­ள­மாக இருந்­தாலும் இவர்­களை அடக்­கி­வாழும் மிகச் சிறு­பான்­மை­யி­ன­ரான பெரும்­தே­சிய கடும்­போக்கு வாதி­களின் பிடி­யி­லி­ருந்து மட்டும் இவர்­களால் தங்­களை விலக்கிக் கொள்ள முடி­வ­தில்லை. ஏனெனில் நமக்­கெ­தற்கு வம்பு என்று ஒதுங்­கிக்­கொண்டு நிம்­ம­தி­யாக வாழத் துடிக்கும் இந்த நல்­ல­வர்­க­ளை­யெல்லாம் நமது அர­சி­யல்­வா­திகள் வெறும் வாக்­கா­ளர்­க­ளாக மட்­டும்தான் அடை­யா­ளம்­கண்டு வரு­கின்­றார்கள். இந்­நாட்டின் பெறு­ம­தி­மிக்க குடி­மக்­க­ளாக இவர்­களை என்­றுமே அர­சி­யல்­வா­திகள் காண்­ப­தில்லை. எனவே நல்­ல­வர்கள் எல்­லாரும் வல்­ல­வர்­க­ளாக மாறும் நிலைமை வரும்­வரை தீர்வுத் திட்டம் வெறும் கேள்விக் குறி­யா­கவே இருக்கும்.

    கேள்வி: தத்­துவ ரீதி­யான உங்கள் விளக் கப்­படி ஒரு நிரந்­தர தீர்வுத் திட்டம் சாத்­திய மாகாது என அர்த்­தப்­ப­டுமா?

    பதில்: ஆம். அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் கட்­சி­களும், தனி­ந­பர்­க­ளா­கவும், குழுக்­க­ளா­கவும் பிரிந்து நின்று இதனை ஒரு­போதும் சாதிக்க முடி­யாது. ஆகக் குறைந்த நிலை­யாக நாம் சமூக ரீதி­யா­க­வா­வது ஒற்­று­மைப்­பட்டு இந்த விட­யத்தை அணுக சக­லரும் முன்­வர வேண்டும். நமது நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­பற்றி எண்ணத் தொடங்­கும்­போது கண்முன் தோற்றம் தரு­வது இலங்­கை-­ – இந்­திய ஒப்­பந்­தத்தின் எச்­ச­மெ­னப்­பட்ட இன்றும் எமது அர­சியல் சூழலை ஆட்­கொண்­டி­ருக்கும் மாகா­ண­சபை முறை­மை­யாகும். இதனை மைய­மாகக் கொண்டே தீர்வுத் திட்­டங்­களும் சிந்­திக்­கப்­ப­டு­கின்­றன. இதனை முற்­றாகக் களைந்து வேறு­வி­த­மான திட்டம் எதுவும் முன்­வைக்­கப்­படப் போவ­தில்லை.

    இந்­தி­யாவும் இலங்­கையும் தங்­க­ளது பிராந்­திய நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக ஒன்­றை­யொன்று நெருக்கிக் கொண்டு விளை­யா­டிய அர­சியல் சது­ரங்­கத்தின் பெறு­பே­றுதான் மாகா­ண­சபை முறைமை. இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னையில் சம்­பந்­தப்­பட்ட பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களும் இரண்­டா­வது பெரும்­பான்மை சமூ­க­மான தமி­ழர்­களும், மூன்­றா­வது எண்­ணிக்­கையை கொண்ட இன­மா­கிய முஸ்­லிம்­களும் இதனை அன்று எதிர்த்­தது வர­லா­றாகும்.

    புலி­க­ளுடன் இந்­திய அமை­திப்­படை பொரு­தி­யதும், சிங்­க­ள­வர்­களின் முக்­கி­ய­மான பல அர­சியல் கட்­சிகள் வட­கி­ழக்கு மாகா­ண­சபை தேர்­தல்­களில் பங்­கு­பற்­றாது பகிஷ்­க­ரித்­ததும், இலங்­கைக்கு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட வருகை தந்த இந்­தியப் பிர­த­மரை ஒரு படை வீரர் தாக்க முனைந்­ததும், பின்னர் இலங்கை, இந்­தியப் பிர­த­மர்கள் இரு­வரும் விடு­தலைப் புலி­களால் கொல்­லப்­பட்­டதும், ஆரம்­பத்­தி­லேயே முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரப் இந்த ஒப்­பந்­த­மா­னது முஸ்­லிம்­களின் முதுகில் கத்­தியால் குத்­தப்­பட்ட துரோ­கத்­த­ன­மா­ன­தொன்று எனக்­கூறி அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யதும் வர­லாற்றுச் சான்­று­க­ளாகும்.

    சமா­தானம் என்ற போர்­வையில் திணிக்­கப்­பட்ட இந்த ஒப்­பந்தம் மக்­களின் நன்­மைக்­காக அன்றி இரு நாடு­களின் முறுகல் நிலையில் காய்­கள்­ந­கர்த்­தப்­பட்டு திணிக்­கப்­பட்ட ஒரு சாசனம் என்­ப­தற்கு மேற்­கூ­றிய சம்­ப­வங்கள் போது­மா­ன­வை­யாகும்.

    கேள்வி: ஆனாலும் இந்த ஒப்­பந்தப் படி அமைந்த மாகா­ண­சபை முறை­மையில் தான் மீண்டும் நாம் தீர்வைத் தேடப்­போகின் றோம். உள்­நாட்டில் வாழும் இனங்­களுக் கிடையில் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்த முனை­யும்­போது இரு நாடு­க­ளுக்­கி­டையி லான பிராந்­திய நல­னுக்­கான போட்­டி­யா­னது மீண்டும் நிழல்­போல ஏதோ ஒரு வகையில் மூக்கை நுழைக்­காது என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வா­த­முள்­ளது?

    பதில்: சிறு­பான்மை சமூ­கங்கள், அதுவும் வட­கி­ழக்கில் மிகப் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்றஇ வாழப்­போ­கின்ற இரண்டு தமிழ்­பேசும் சமூ­கங்­களும் இதய சுத்­தி­யுடன் தனி­யான கூட்­ட­மைப்­பு­க­ளாக உருப்­பெற்று மனம் விட்டு பேச­வேண்டும். அவ்­வா­றான ஒரு சம­ரசப் பேச்சு இல்­லாமல் ஒரு நிரந்­தரத் தீர்வை எம்மால் பெற்றுக் கொள்ள முடி­யாது. தமிழ் முஸ்லிம் சமூ­கங்­களை திருப்­திப்­ப­டுத்­தாத எந்த ஒரு தீர்வுத் திட்­டமும் நிரந்­தர சமா­தா­னத்தைக் கொண்­டு­வரப் போவ­தில்லை. எந்­த­வொரு தனிப்­பட்ட நிகழ்ச்­சி­நி­ரல்­க­ளுக்கும் ஆட்­ப­டாது கட்­சிகள் தமது நிலைப்­பா­டு­களை தாம்­சார்ந்த சமூ­கங்­களின் நலன்­களை முன்­னி­றுத்தி தெளி­வாக முன்­வைக்க வேண்டும். எங்­கி­ருந்தோ ஒரு சமிக்ஞை வரும்­வரை காத்­தி­ருப்­பது போன்று மௌனம் காப்­பது வெறும் சந்­தே­கத்­துக்கு வழி­வ­குக்கும். இறு­தி­வரை காக்கும் மௌனம் படு­கு­ழியில் வீழ்த்­தி­விடும்.

    கேள்வி: அப்­ப­டி­யானால் தற்­போ­துள்ள மாகா­ண­சபை அமைப்பு முழு­மை­யான அதி காரப்­ப­ர­வ­லுக்­கான ஒரு தள­மாக அமை யாதா?

    பதில்: இலங்­கையில் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் தோன்­றிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக மாகா­ண­சபை முறை திணிக்­கப்­பட்ட போது அது சமூக ரீதி­யான அதி­காரப் பர­வ­லாக்­கலா? அல்­லது பிராந்­தி­ய­ரீ­தி­யான அதி­காரப் பர­வ­லாக்­கலா? என்ற மயக்க நிலையே தோற்­று­விக்­கப்­பட்­டது.

    முறை­யான கலந்­து­ரை­யா­டல்கள் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நடாத்­தப்­ப­டாமல் அரை­கு­றை­யா­கவே இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

    இந்­தி­யாவும் இலங்­கையும் பேசும்­போது வடக்கு கிழக்­குக்கு வெளியில் மாகாண சபைகள் அமைக்­கப்­படும் என்று எவ­ருமே எதிர்­பார்க்­க­வில்லை. சிங்­கள மக்கள் கேட்­கா­ம­லேயே அவர்­க­ளுக்கு மாகாண சபைகள் வழங்­கப்­பட்­டன. நான் தமி­ழ­ருக்கு விஷே­ட­மாக எத­னையும் வழங்­க­வில்லை. அவர்­க­ளுக்குக் கொடுத்­தது போன்றே உங்­க­ளுக்கும் தந்­தி­ருக்­கிறேன் என்று சிங்­கள மக்­க­ளுக்குக் கூறவே ஜே.ஆர். ஜெய­வர்­தன அவ்­வாறு செய்தார்.

    அதே வேளை வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­ப­ட­வுள்ள விடயம் அந்த மாகா­ணங்­களில் வாழ்ந்த சமூ­கங்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே இடம்­பெற்­றது. என­வேதான் இந்­தி­யா­வினால் திணிக்­கப்­பட்ட இத்­தீர்வு இங்கு எதையும் சாதிக்­க­வில்லை. மாறாக பிரச்­சி­னை­களை மேலும் சிக்கல் நிலைக்குக் கொண்டு வந்­தது. அது மட்­டு­மல்­லாமல் தீர்­வுக்குப் பின் சமா­தா­னத்தை நிலை நாட்­ட­வந்த படை­யி­னரும் இங்கு போர் புரியும் ஒரு நிலைக்கு தள்­ளப்­பட்­டனர்.

    கேள்வி: இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் கிழக்கு முஸ்­லிம்­களை உள்­ள­டக்­காமல் அவர்கள் மீது திணிக்­கப்­பட்­டது என்றா கூற வருகின்­றீர்கள்?

    பதில்: ஆம் அது கிழக்­கி­லுள்ள மக்­க­ளுக்­கல்­லாது பிராந்­தியம் எனும் அடிப்­ப­டை­யி­லேயே அதி­கா­ரத்தை வழங்­கி­யி­ருக்­கி­றது. இத்­த­கைய அணு­கு­முறை பிழை­யான செயற்­பா­டாகும். வடக்கில் முஸ்­லிம்கள் இருப்­பதும் கவ­னிக்­கப்­ப­ட­வில்லை. இந்­தி­யாவும் இலங்­கையும் பேச்­சு­வார்த்தை நடாத்திக் கொண்­டி­ருந்­த­போது முஸ்­லிம்கள் அழைக்­கப்­ப­ட­வில்லை.

    அரசும் தமிழ் போரா­ளி­களும் இரு நாடு­க­ளோடும் பேசு­கையில் குறை நிறைகள் சமர்ப்­பிக்­கப்­படும் போது முஸ்­லிம்­களும் சென்­றி­ருந்­தனர். அந்த உடன்­ப­டிக்­கையின் முகத்­தோற்­ற­மாக ஒப்­பந்தம் முடிந்­ததும் கைச்­சாத்­திட்­டபின் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு பேச்­சு­வார்த்தை நடாத்­தப்­படும் என்­றி­ருந்­தது.

    04.05.1986 மற்றும் 19.12.1986ஆம் திக­தி­களில் பேசப்­பட்ட கருத்­துக்கு அமை­யவே ஒப்­பந்தம் அமையும் என்றும் அதில் காணப்­பட்­டது. (பந்தி 2-2-1-5) இது பற்றி தெரிந்து கொள்ள வேண்­டு­மாயின் இந்­திய ராஜ­தந்­தி­ரி­க

    ளான நட்வார் சிங்கும், சிதம்­ப­ரமும் 1986 இல் கூறிய கருத்­துக்­களை மீட்­டுக்­கொள்­ளலாம்.

    கேள்வி: அப்­ப­டி­யானால் இந்த உத்­த­ர­வாதம் மீறப்­பட்­டுள்­ளது என்றா கூற வரு­கின்­றீர்கள். முஸ்­லிம்கள் ஏமாற்­றப்­பட்­டார்­களா?

    பதில்: ஆம், முஸ்­லிம்கள் அழைக்­கப்­ப­டவும் இல்லை. எமது அபிப்­பி­ராயம் கோரப்­ப­ட­வு­மில்லை. எம்மைப் புறந்­தள்ளி விட்டு ஒரு தலைப்­பட்­ச­மா­கவே தாமே வகுத்துக் கொண்ட தீர்­மா­னத்தை எம் தலை­மீது திணித்து விட்­டார்கள்.

    கேள்வி: மாகாண, மாவட்ட எல்­லைகள் உங்­களின் வேண்­டு­கோ­ளிற்­க­மைய மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும் என்­கின்­றீர்­களா?

    பதில்: சமூ­கங்கள் திருப்­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மானால் அதனைச் செய்­வதில் ஒரு தவறும் இல்லை. நமது நாட்­டி­லுள்ள மாகா­ண­சபை மற்றும் மாவட்ட எல்­லைகள் எல்லாம் மாற்ற முடி­யா­த­வை­யல்ல. ஒரு முழு­மை­யான அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் நோக்­கோடு நமது பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றம­டைந்­தி­ருக்கும் இன்­றைய கால­கட்­டத்தில் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வையும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக தேவை­யான மாற்­றங்­களை செய்வதில் என்ன தவறு உள்­ளது?

    தற்­போதுள்ள மாகாண எல்­லை­க­ளா­வன நிர்­வா­கத்தை சிர­ம­மின்றி செய்­வ­தற்­காக கால­னித்­துவ அர­சாங்­கங்­களால் அவ்­வப்­போது போடப்­பட்­ட­வைதான்.

    ஒரு சமூகம் இன்­னொரு சமூ­கத்தை அடக்கி ஆளும் நோக்­குடன் மாவட்ட எல்­லைகள் மாற்றி அமைக்­கப்­பட்ட சம்­பவம் கிழக்­கிலும் வடக்­கிலும் இடம்­பெற்ற கறை­ப­டிந்த வர­லாறு நம் நாட்டில் பதி­யா­ம­லில்லை. என­வேதான் இவ்­வா­றான பாகு­பா­டுகள் சீர்­தி­ருத்­தப்­பட்டு சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டும் வகையில் நிர்­வா­கங்கள் சீர­மைக்­கப்­பட வேண்டும். காணிப்­ப­கிர்வுஇ மற்றும் தொழில் வாய்ப்­புக்கள் வழங்­குதல்இ வளப்­பங்­கீ­டுகள் அனைத்தும் மாவட்­டங்­களில் வாழும் சிறு­பான்மை சமூ­கங்­களின் இனப்­ப­ரம்­ப­லுக்கு ஏது­வாக வழங்­கப்­ப­டு­வ­தற்­கான சட்­ட ­மூ­லங்கள் புதிய யாப்பு மாற்­றத்­தின்­போது உள்­வாங்­கப்­பட வேண்டும். மாவட்ட எல்­லைகள் திருப்­தி­யான வகையில் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். 1871ஆம் ஆண்­டி­லி­ருந்து 2012 ஆம் ஆண்டு வரை 16 மாவட்டங்­களே தொடர்ந்து ஒரே எல்­லையைக் கொண்­ட­வை­யாகும். ஏனைய மாவட்­டங்கள் எல்லாம் காலக்­கி­ர­மத்தில் எல்­லைகள் மாற்­றப்­பட்­ட வை­யாகும்.

    கேள்வி: அர­சியல் மாற்­றத்தின் போது காணிப்­பி­ரச்­சி­னை­களின் தீர்­வுகள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் எனக்­கூ­றி­யுள்­ளீர்கள். எவ்­வா­றான தீர்­வு­களை நீங்கள் எதிர்பார்க்­கின்­றீர்கள்?

    பதில்: இனப்­பி­ரச்­சினைத் தீர்­வின்­போது தவிர்க்க முடி­யாத மிகவும் ஆழ­மாகப் பதிய வேண்­டிய ஒரு கூறுதான் நிலம் சம்­பந்­த­மான விட­யங்­க­ளாகும். காணி உரி­மையும்இ பங்­கீட்டு முறை­களும் பிராந்­திய மக்­களின் உரி­மை­யாகும். மத்­தியில் உள்ள அரசு கலப்­ப­ட­மற்ற தெளி­வான சட்­ட­திட்­டங்­களை புதிய யாப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தெளிவற்ற பங்கீட்டு முறைகளால் தான் சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்த மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் எல்லைகள் தன்னிச் சையாக மாற்றியமைக்கப்பட்டன. நிர்வாகத் திணிப்புக்கள் இறுக்கமாக இன்னும் கடைப் பிடிக்கப்படுகின்றன.

    கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந்துள்ளதாக பதிவுகள் உள்ளன. அம் பாறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 32 ஆயி ரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந் துள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இவை பற்றிய பின்வரும் காணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் 100 நாள் அரசாங்கத்தின் போது என்னால் பிரதமருக்கு பாரப்படுத்தப்பட்டன.

    வட கிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச் சினை பற்றி ஆராய ஒரு விசேட அதிகாரம் பொருந்திய சுயாதீனமான காணிக் கச்சேரி அமைக்கும்படி கோரிக்கை விடுத்தும் அவரால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

    இவ்வாறான முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அதற்கான தீர்வுகளை உள் ளடக்கப்படாமல் பிரச்சினைக்குக் காரண மான விடயங்கள் ஒதுக்கப்படாமல் நிர் வாக ரீதியானஇ சட்டரீதியான ஓட்டைகள் அடைக்கப்படாமல் எவ்வாறு பிரச்சினைகள் முற்றுப்பெறும்? எனவேதான் ஒரு முழுமை யான இதயசுத்தியான அப்பழுக்கற்ற சுத்து மாத்தில்லாத அரசியல் யாப்பினூடான தீர்வுப் பொதியினையே எமது மக்கள் எதிர்பார்த் துள்ளனர்.
    நன்றி - வீரகேசாி வார வெளியீடு
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் பேசும் சமூகங்கள் மனம் விட்டுப் பேசாமல் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top