• Latest News

    September 25, 2016

    முஸ்­லிம்­களும் மத அடை­யா­ளமும்

    சஹாப்தீன் -
    நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­பி­ருந்தே இன்று வரை முஸ்­லிம்கள் ஒரு தனி­யான தேசிய இனம் என்­பதை ஏற்றுக் கொள்­வ­தற்கு மாற்று இனத்­த­வர்­களில் சிலர் மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றனர். இலங்­கையில் வாழு­கின்ற சிங்­க­ள­வர்கள் ஆரி­யர்­களின் பரம்­ப­ரை­யினர். இவர்கள் இலங்­கைக்கு வருகை தரு­வ­தற்கு முன்­னரே அரே­பி­யர்கள் வந்து விட்­ட­தாக 'வில்­லியம் கைகர்' என்பவர் குறிப்­பி­டு­கின்றார். ஆராய்ச்­சி­யாளர் கலா­நிதி பாலேந்­திரா, கடந்த இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளாக முஸ்­லிம்கள் இலங்­கையில் வாழ்ந்து வரு­கின்­ற­மையால் வேடர்கள் ஏனைய பழங்­கு­டிகள் போன்று அவர்­களும் இந்­நாட்டு குடி­களே என்று குறிப்­பிட்­டுள்ளார். இலங்கை மன்­னர்­களின் ஆட்சிக் காலங்­களை எடுத்து நோக்­கி­னாலும் முஸ்­லிம்­களின் தாயகம் இலங்கை என்­பதை மிகத் தெளி­வாக அறிந்து கொள்­ளலாம்.
    மன்­னர்­களின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் மிகவும் கண்­ணி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். மன்­னர்­களின் ஆலோ­ச­கர்­க­ளா­கவும், வெளி­வி­வ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ளர்­க­ளா­கவும் பல்­வேறு பத­வி­க­ளையும் அக்­கால இலங்கை மன்­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளார்கள்.
    இவ்­வி­த­மாக முஸ்­லிம்­களின் வர­லாறு இருந்­தாலும், பொது­பல சேனா போன்ற இன­வாத அமைப்­புக்கள் முஸ்­லிம்கள் இந்த நாட்டில் வாழ வந்­த­வர்கள். அவர்­க­ளுக்கு விசேட உரி­மைகள் எதுவும் கிடை­யா­தென்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதேவேளை, ஒரு சில தமிழ் தலை­வர்­களும் முஸ்­லிம்­களை தேசிய இன­மாக ஏற்றுக் கொள்­ளாத நிலை இன்றும் காணப்­ப­டு­கின்­றது.
    முஸ்­லிம்கள் பெரும்­பாலும் தமிழை தாய் மொழி­யாகக் கொண்­டுள்­ளார்கள். இதனால், முஸ்­லிம்கள் மொழியின் அடிப்­ப­டையில் தமி­ழர்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு முனைந்­துள்­ளார்கள்.
    முஸ்­லிம்­களை இஸ்­லா­மியத் தமி­ழர்கள் என்று அழைக்க முற்­பட்­டார்கள். 1885ஆம் ஆண்டு சட்­ட­வாக்கப் பேர­வையில் சேர்.பொன்.இரா­ம­நாதன் உரை­யாற்­று­கையில், 'இஸ்­லா­மிய மதத்தைப் பின்­பற்றும் தமி­ழர்கள் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்­த­வர்கள் என்­பதால் அவர்­க­ளுக்குத் தனி­யான பிர­தி­நி­தித்­துவம் வழங்­குதல் தவ­றா­னது' என வாதிட்டார்.
    இதனை அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலை­வர்கள் எதிர்த்­தார்கள். இதன் கார­ண­மாக 1889ஆம் ஆண்டு சட்ட நிரு­பண சபைக்கு எம்.சீ.அப்துல் ரஹ்மான் நிய­மிக்­கப்­பட்டார். இதன் மூல­மாக முஸ்­லிம்கள் பெரும்­பாலும் தமிழை பேசி­னாலும் , அவர்கள் இலங்­கையில் வாழும் தேசிய இனங்­களில் ஒன்று என்­ப­தனை கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்கள் ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள் என்­ப­தனை காட்­டு­கின்­றது.
    இஸ்லாம் மார்க்­கத்தை பின்­பற்­று­கின்­ற­வர்கள் யாராக இருந்­தாலும், எந்த நாட்டைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும், எந்த மொழியை பேசி­னாலும் அவர்கள் முஸ்­லிம்கள் என்­றுதான் அழைக்­கப்­ப­டு­கின்­றார்கள்.
    முஸ்­லிம்கள் தங்­களை மதத்தின் அடிப்­ப­டை­யில்தான் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் எந்த விட்டுக் கொடுப்­பையும் செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் தயா­ரில்லை. இந்த நிலைப்­பாட்­டில்தான் இலங்கை முஸ்­லிம்­களும் உள்­ளார்கள்.
    இந்­நி­லையில், அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், முஸ்­லிம்கள் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக தமது அடை­யாளம் மதம் சார்ந்­தது, மொழி சார்ந்­தது அல்ல என்று கூறி வரு­கின்­றனர். கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவி­தைகள் எழுதி பாடும் போதும் அவர்­களின் கலை அடை­யா­ளமும் மொழி சார்ந்­தது என்று சொல்லத் தோன்­று­கின்­றது என மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற தமிழ் மக்கள் பேர­வையின் முத்­தமிழ் விழாவில் உரை­யாற்­றிய போது தெரி­வித்­துள்ளார்.
    வட­மா­காண முத­ல­மைச்­ச­ரின் இக்­க­ருத்து முஸ்­லிம்­க­ளி­டையே விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
    தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மை­யாக செயற்­பட்டு தமது உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்­டு­மென்ற சிந்­தனை ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் இன்­றைய அர­சியல் சூழலில், வட­மா­காண முத­ல­மைச்­சரின் இக்­க­ருத்து தமி­ழர்கள் 1885ஆம் ஆண்டு சேர். பொன்.இரா­ம­நாதன் முன் வைத்த கருத்­தி­லி­ருந்து இன்னும் விடு­ப­ட­வில்லை என்­ப­தனைக் காட்­டு­கின்­றது.
    இலங்­கையில் ஆயுதப் போராட்டம் உச்சக் கட்­டத்தில் இருந்த காலத்­திலும், அதற்கு முன்­னரும் முஸ்­லிம்கள் தமிழ் மொழியை பேசு­கின்­ற­வர்கள். அவர்கள் தனித்­து­வ­மா­ன­தொரு இன­மல்ல. அவர்­க­ளுக்கு தனி­யான அதி­கா­ரங்கள் வழங்க வேண்­டி­ய­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. பின்னர் இக்­க­ருத்­தி­லி­ருந்து தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தம்மை விடு­வித்து முஸ்­லிம்கள் ஒரு தனித்­து­வ­மான இனம் என்­ப­தனை ஏற்றுக் கொண்­டார்கள். இதன் பின்னர் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே உற­வுகள் பல­ம­டைந்து கொண்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
    கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன், முஸ்லிம் கட்­சி­களும் இணைந்து கொள்ள வேண்­டு­மென்று முஸ்­லிம்கள் மத்­தியில் பர­வ­லான அபிப்பி­ரா­யங்கள் ஏற்­பட்­டன. ஆயினும், முஸ்லிம் கட்­சிகள் தங்­களின் அர­சியல் இருப்­புக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன் வர­வில்லை.
    முஸ்­லிம்கள் தமிழ் மொழியை பேசி­னாலும், அவர்கள் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக தமது அடை­யா­ள­மாக மதத்தைக் கொள்­ள­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் கட்­சிகள் தோற்றம் பெறு­வ­தற்கு முன்னர் முஸ்­லிம்கள் தமி­ழ­ரசுக் கட்­சி­யிலும், ஐ.தே.கவிலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் தேர்­தலில் போட்­டி­யிட்­டுள்­ளார்கள்.
    இக்­கட்­சி­களில் போட்­டி­யிட்ட போது தங்­களை மதத்தின் அடிப்­ப­டையில் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. மதத்தின் அடிப்­ப­டையில் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்தால் முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கு தமிழ், சிங்­கள வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்­தி­ருக்­க­மாட்­டார்கள்.
    முஸ்­லிம்கள் தமிழை பேசும் அதே வேளை, அவர்­களின் கலை, கலா­சாரம், பழக்க வழக்­கங்கள் தமி­ழர்­களை விடவும் மாறு­பட்­ட­தா­கவே இருந்து வரு­கின்­றன.
    ஆகவே, முஸ்­லிம்கள் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக மதத்தை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.
    முஸ்­லிம்கள் தமிழ் மொழியை பேசி­னாலும், அவர்கள் தனித்­து­வ­மான கலை, கலா­சா­ரங்­களைக் கொண்ட இனம் என்­ப­தனை ஏற்றுக் கொண்­டால்தான் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் கைகோர்த்துப் பய­ணிக்க முடியும்.
    ஒரு நாட்டின் எல்­லைக்குள் வாழ்­கின்ற ஒரே மொழியைப் பேசு­கின்ற இனங்கள் தங்­க­ளுக்கு சுய நிர்ணய உரிமை வேண்­டு­மென்று கேட்ட வர­லா­றுகள் பல உள்­ளன.
    முஸ்­லிம்­களும்...
    (03ஆம் பக்கத் தொடர்ச்சி)
    இலங்­கையில் சிங்­கள மொழி பேசு­கின்­ற­வர்கள் தமிழ் மொழி பேசு­கின்­ற­வர்­களை ஒடுக்­கி­ய­தனைப் போன்று, ஒரே மொழியை பேசு­கின்ற இனங்­களின் உரி­மை­களை மறுத்து ஒடுக்க எடுத்த நட­வ­டிக்­கைகள் அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையை உலக வர­லாற்றில் காணலாம்.
    ஐயர்­லாந்து மக்­களும் இங்­கி­லாந்து மக்­களும் ஆங்­கில மொழியை பேசு­கின்ற ஒரே கார­ணத்­திற்­காக ஐயர்­லாந்து மக்கள் தம்மை ஆங்­கிலத் தேசிய இன­மாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அவர்கள் தங்­களை தனித்­து­வ­மா­ன­தொரு இனம் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­னார்கள். அவர்கள் தமது தனித்­து­வத்தைப் பேணு­வ­தற்­காக பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து பிரிந்து செல்ல எண்­ணி­னார்கள். இதற்­காக நீண்ட ஆயுதப் போராட்­டத்தை மேற்­கொண்­டார்கள்.
    இவ்­வாறு உலகில் ஒரு மொழியை பேசு­கின்­ற­வர்கள் தங்­களை வேறு­பட்ட தனித்­து­வ­மான இன­மாக காட்டிக் கொண்­டி­ருக்­கையில், இலங்­கையில் முஸ்­லிம்கள் மொழியின் அடிப்­ப­டையில் தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென்று எண்­ணு­வது, கருத்­துக்­களை முன் வைப்­பது இன­வாத சிந்­த­னை­யா­கவே இருக்­கின்­றது. முஸ்­லிம்­களை ஒரு தனித்­து­வ­மான இன­மென்று ஏற்றுக் கொள்­ளா­மையை காட்­டு­கின்­றது.
    நாட்டில் நாங்கள் பெரும்­பான்­மை­யினர். நாடு எங்­க­ளுக்­கு­ரி­ய­தென்று சிங்­களத் தலை­வர்கள் செயற்­பட்­டதன் கார­ணத்­தி­னால்தான் தமி­ழர்கள் ஆயுதப் போராட்­டத்தை மேற்­கொண்­டார்கள். இதனால், பல இழப்­புக்­களை தமி­ழர்கள் சந்­தித்­தார்கள். இன்று சிங்­களத் தலை­வர்­களில் ஒரு பகு­தி­யினர் கடந்த கால தவ­று­களை உணர்ந்­துள்­ளார்கள். ஆதலால், தமி­ழர்கள் முஸ்­லிம்கள் ஒரு மொழியை பேசு­கின்­றார்கள் என்­ப­தற்­காக முஸ்­லிம்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரி­மைகள் தேவை­யில்லை என்று கருதக் கூடாது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரிமை வழங்க வேண்­டு­மென்­ப­தகை ஏற்றுக் கொண்­டுள்­ளது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் இந்த சிந்­தனை தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே ஒற்­று­மையை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. இதில் யாரும் கல் எறிந்து விளை­யா­டு­வ­தனை அனு­ம­திக்கக் கூடாது.
    நாட்டை ஆட்சி செய்த சிங்­கள தலை­வர்கள் எல்­லோரும் இந்­நாட்டு மக்கள் என்ற நல்ல சிந்­த­னை­யுடன் செயல்­பட்­டி­ருந்தால், அவர்­க­ளுக்­கு­ரிய உரி­மை­களை வழங்கி இருந்தால், இன்று இனங்கள் தங்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரிமை வேண்­டு­மென்று கோரிக்­கை­களை முன் வைக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. இலங்கை மிகப் பெரிய பொரு­ளா­தா­ரத்தைக் கொண்­ட­தாக இருந்­தி­ருக்கும்.
    இந்­நாடு சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­ரி­ய­தென்ற விவா­தங்கள் இன்­றைய நவீன உலகில் ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். இந்த விவா­தத்தை ஏற்றுக் கொள்­வ­தாக இருந்தால், இந்­நாடு சிங்­க­ள­வர்­களின் நாடு என்று ஏற்றுக் கொள்ள முடி­யாது. இன்றும் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் ஆதிக் குடி­க­ளுக்­குத்தான் இந்­நாடு சொந்­த­மாகும்.
    மேலும், அமெ­ரிக்­காவும், கன­டாவும் செவ்­விந்­தி­யர்­க­ளுக்கே உரித்­தா­ன­தாக இருக்க வேண்டும். அவுஸ்­தி­ரே­லியா அப்­ரோஜீன் இன மக்­க­ளுக்கே உரித்­தா­னது. இந்­தியா திரா­வி­டர்­க­ளுக்கே உரித்­தா­னது என்ற வாதங்­க­ளையும் முன்­வைக்­கலாம். இவ்­வா­றான வாதங்­க­ளுக்கு அப்பால் தேசிய ஒற்­று­மையை வளர்க்க வேண்டும். இனங்­க­ளுக்கு இடையே ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். யார் பூர்­வீகக் குடிகள் என்­பதும், ஆண்ட பரம்­பரை என்ற கருத்தும் தேசி­யத்­திற்கு எதி­ரா­னது. நிலப்­பி­ர­புத்­துவ சிந்­த­னைக்­கு­ரி­யது.
    தென் இத்­தா­லியில் குடி­யே­றிய இந்­தி­யர்கள் இன்று அடை­யாளம் தெரி­யாமல் இத்­தா­லி­யர்கள் ஆகி­விட்­டார்கள். இதே போன்று துலூஸ் போன்ற பிரஞ்சு நக­ரங்­களில் வாழ்ந்த வட ஆபி­ரிக்க அரே­பி­யர்கள் பிரஞ்­சுக்­கா­ரர்­க­ளா­கவே மாறி­விட்­டார்கள். தொழி­லுக்­காக ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சென்­ற­வர்கள், கல்­விக்­காக சென்­ற­வர்கள் அந்­நாட்டின் பிர­ஜை­க­ளாகி விட்­டார்கள். இவ்­வாறு உலகில் மாற்­றங்கள் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில் இலங்கை பௌத்­த­வர்­க­ளுக்கு சொந்தம் என்ற விவா­தங்கள் காலத்­திற்கு பொருத்­த­மற்­றது.
    ஆகவே, இவ்­வாறு மாற்­றங்கள் உலகில் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில் பௌத்­தர்கள் இந்­நாடு எங்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­னது என்ற சிந்­த­னை­யி­லி­ருந்து விடு­பட்டு, இந்­நாடு இங்கு வாழும் அனைவருக்கும் சொந்தமானது. இது எங்கள் நாடு என்ற பற்றுதலுடன் வாழ வேண்டும். மேலும், முஸ்லிம்கள் தமிழை பேசுகின்றார்கள் என்பதற்காக அவர்களின் தனித்துவத்தை புறக்கணிக்கக் கூடாது.
    ஒரு இனம் தமக்கான தனித்துவத்தையும், கலைகளையும், கலாசாரத்தையும், விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். ஒரு இனம் தங்களின் கலை, கலாசாரத்தை உறுதியாக பேணிப் பின்பற்றாவிட்டால், குறிப்பிட்ட அவ்வினம் வேறு ஒரு இனத்தின் கலை, கலாசாரத்தைப் பின்பற்றும் சூழல் ஏற்படும். அந்த வகையில் முஸ்லிம்கள் தங்களது கலை, கலாசாரத்தை, விழுமியங்களை பேணிக் கொள்வதில் இறுக்கமான கொள்கைகளைக் கொண்டவர்கள். ஒரு முஸ்லிம் தம்மை மொழியால் அடையாளப்படுத்துவதில்லை. மதத்தால்தான் அடையாளப்படுத்துவர். முஸ்லிம்கள் தங்களின் கலை கலாசாரத்தை மற்றொரு இனத்திற்கு ஏற்ப பின்பற்ற முடியாது. அவ்வாறு பின்பற்றினால் முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தை இழக்க வேண்டியேற்படும். இன்று முஸ்லிம்கள் இலங்கையில் அரசியல், பொருளாதார ரீதியில் பந்தாடப்பட்டுக் கொண்டிருப்பதற்கு , சுயநலப் போக்குடைய முஸ்லிம் தலைவர்கள்தான் காரணமாகும். 
    Virakesari Weekly - 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்­லிம்­களும் மத அடை­யா­ளமும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top