• Latest News

    September 25, 2016

    உச்ச நீதி­மன்ற தீர்ப்பை ஆட்­சே­பித்து கர்­நா­டக பேர­வையில் தீர்­மானம் - காவிரி நீரை கர்­நா­ட­காவில் குடிநீர் தேவைக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்டும் என வலியுறுத்தல்

    தமி­ழ­கத்­துக்கு காவிரி நீரை திறக்கக் கோரும் உச்ச நீதி­மன்ற தீர்ப்பை ஆட்­சே­பித்து கர்­நா­டக சட்டப் பேர­வையில் அனைத்து கட்­சி­யி­னரின் ஆத­ர­வுடன் சிறப்பு தீர்­மானம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
    அதில் காவிரி நீரை கர்­நா­ட­காவில் குடிநீர் தேவைக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்டும் என கூறி­யதன் மூலம், தமி­ழ­கத்­துக்கு நீரை திறக்க வாய்ப்­பில்லை என மறை­மு­க­மாக‌ தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
    காவிரி நதி நீர் பங்­கீடு தொடர்­பான மனுவை விசா­ரித்த‌ உச்ச நீதி­மன்றம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, ‘‘த‌மி­ழ­கத்­துக்கு செப்­டெம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரை தினமும் விநா­டிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்­நா­டகா திறந்­து­விட வேண்டும். 4 வாரத்­துக்குள் மத்­திய அரசு காவிரி மேலாண்மை வாரி­யத்தை அமைக்க வேண்டும்’’ என‌ உத்­த­ர­விட்­டது.
    ஆனால் கிருஷ்­ண­ரா­ஜ­சாகர், கபினி ஆகிய‌ அணை­களில் இருந்து தமி­ழ­கத்­துக்கு திறக்­கப்­பட்ட காவிரி நீர் கடந்த 20 ஆம் திகதி நிறுத்­தப்­பட்­டது.
    இதைத் தொடர்ந்து காவிரி விவ­காரம் குறித்து விவா­திப்­ப­தற்­காக கர்­நா­டக‌ சட்­டப்­பே­ரவை மற்றும் சட்ட மேல­வையின் சிறப்பு கூட்டம் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை கூடி­யது. இதில் சிறப்பு தீர்­மானம் தாக்கல் செய்­யப்­பட்­டது. அதில்,
    ‘‘கர்­நா­ட­காவில் வறட்சி நில­வு­வதால் காவி­ரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ­சாகர், கபினி, ஹேமா­வதி, ஹாரங்கி ஆகிய 4 அணை­க­ளிலும் 27.6 டி.எம்.சி. நீர் மட்­டுமே இருப்பு உள்­ளது. இந்த நீரை பெங்­களூர் மாந­கரம் மற்றும் காவிரி நீர்ப்­பா­சனப் பகு­தி­களின் குடி­நீ­ருக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்டும். வேறு எந்த கார­ணத்­துக்கும் இந்த அணை­களின் நீரை பயன்­ப­டுத்தக் கூடாது. தற்­போ­துள்ள இந்த குறைந்த அள­வி­லான நீரைக் கொண்டே 2017 ஜன­வரி 31 ஆம் திகதி வரை­யி­லான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
    தீர்­மானம் குறித்து முதல்வர் சித்­த­ரா­மையா பேசு­கையில்,
    கர்­நா­ட­காவில் அடுத்த மழைக் காலம் வரை காவிரி நீர்ப்­பா­சன பகுதி மக்­களின் குடி­நீ­ருக்கு மட்டும் 24.11 டி.எம்.சி. நீர் தேவைப்­ப­டு­கி­றது. போதிய மழை இல்­லா­ததால் கிருஷ்­ண­ரா­ஜ­சாகர், ஹேமா­வதி உள்­ளிட்ட 4 அணை­களும் நீரின்றி வறண்டு மிக மோச­மான நிலையில் இருக்­கின்­றன. மைசூரு, மண்­டியா, சாம்­ராஜ்­நகர், ராம்­நகர் மாவட்­டங்­களின் விவ­சாயம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
    இத்­த­கைய அவல நிலையில் தமி­ழகம் இல்லை. மேட்டூர் அணையில் இன்­றைய நில­வ­ரப்­படி 52 டி.எம்.சி. நீர் இருப்பு உள்­ளது. தமி­ழக விவ­சா­யிகள் ஏற்­கெ­னவே ஒரு போகம் வேளாண்­மையை முடித்­து­விட்­டனர். தற்­போது சம்பா பயி­ருக்­காக மீண்டும் நீரை கேட்­கின்­றனர். நாங்கள் உயி­ருடன் வாழ்­வ­தற்கே குடிநீர் இல்­லா­த­போது, சம்பா பயிர்­க­ளுக்கு எப்­படி நீரை விட முடியும். அடுத்த ஆண்டு வரை நாங்கள் யாரிடம் போய் கையேந்­துவோம்?
    கர்­நா­ட­காவில் உள்ள அனை­வ­ருக்கும் நீதி­மன்­றங்கள் மீது மிகுந்த மரி­யாதை உள்­ளது. கன­விலும் நீதி­மன்ற உத்­த­ரவை மீறும் எண்ணம் கர்­நா­டக அர­சுக்கு இல்லை. கர்­நா­ட­காவில் சில ஆண்­டு­க­ளாக தென்­மேற்கு பரு­வ­மழை பொய்த்­துப்­போ­கி­றது. ஆனால் கடந்த 50 வரு­டங்­களில் ஒரு­மு­றை­கூட தமி­ழ­கத்தில் வட கிழக்கு பரு­வ­மழை பொய்க்­க­வில்லை.
    அடுத்த மாதமும் தவ­றாமல் வட­கி­ழக்கு பரு­வ‌­மழை அங்கே பொழியும். இதனால் அங்கு சம்பா சாகு­ப­டியும், குறுவை சாகு­ப­டியும் சிறப்­பாக நடைபெறுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மீட்டர் தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைக்கிறது. கர்நாடகாவில் ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினால்தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஆனாலும் கர்நாடகாவிடம் காவிரி நீரை பெறுவதை தமிழகம் வாடிக்கையாக கொண்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உச்ச நீதி­மன்ற தீர்ப்பை ஆட்­சே­பித்து கர்­நா­டக பேர­வையில் தீர்­மானம் - காவிரி நீரை கர்­நா­ட­காவில் குடிநீர் தேவைக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்டும் என வலியுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top