• Latest News

    September 25, 2016

    சட்டவிரோதமான எல்லா யுத்தங்களையும் சட்டமயமாக்கிய ஐக்கிய நாடுகள் சபை



    இரண்டாம் உலக மகா­யுத்­தத்தின் முடிவு நாட்­களில் அமெ­ரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் 1944 ஓகஸ்ட் மற்றும் அக்­டோபர் மாதத்­துக்கு இடைப்­பட்ட காலத்தில் வாஷிங்­டனில் சந்­தித்து உரு­வாக்­கிய அமைப்பே ஐக்­கிய நாடுகள் அமைப்பு. அப்­போது இருந்த லீக் ஒப் நேஷன்­ஸுக்கு பதி­லாக இது உரு­வாக்­கப்­பட்­டது.
    இதற்­கான சாச­னத்தை எழு­தும்­போது இந்தப் பெரிய தேசங்கள் தமது சக்­தி­யையும் நல­னையும் தக்­க­வைத்துக் கொள்ளும் வகை­யி­லேயே நடந்து கொண்­டன. அவர்­க­ளு­டைய பொரு­ளா­தார, அர­சியல் நலன்­க­ளுக்கு உலகம் இசைந்து செல்­லக்­கூ­டிய வகை­யி­லேயே ஐக்­கிய நாடுகள் அமைப்­புக்­கான கட்­ட­மைப்பு மற்றும் விதி­மு­றைகள் என்­ப­ன­வற்றை அவை உரு­வாக்­கின.
    கடை­சி­யாக 1945 அக்­டோபர் 24இல் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­படத் தொடங்­கி­ய­போது, அதன் அங்­கத்­துவ நாடுகள் தமக்­கி­டை­யி­லான பிணக்­கு­களை சமா­தா­ன­மான முறையில் தீர்த்துக் கொள்ளும், மேலும் உலகம் ஒரு சமா­தா­ன­மான இட­மாக மாறும் என்ற நம்­பிக்கை உரு­வாக்­கப்­பட்­டது.
    ஆனால், இந்த நம்­பிக்கை உரு­வாக்­கப்­பட்டு இரண்டு வருட காலத்­தி­லேயே ஐ.நா. மர­ணித்­து­விட்­டது. சர்­வ­தேச நீதி சிதை­வ­டைந்­தது. மனித இனம் அச்­சு­றுத்­த­லுக்­கா­ளா­னது. காரணம், 1947 நவம்பர் 29இல் பலஸ்­தீன பூமியில் இஸ்­ரேலை ஸ்தாபிக்கும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­மாறு அன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஹரி எஸ். ட்ரூமன் ஐக்­கிய நாடுகள் சபையை மிரட்­டினார். இந்த தீர்­மானம் எல்­லா­வி­த­மான தார்­மிகக் கொள்­கை­க­ளையும் சட்­டங்­க­ளையும் மீறி­ய­தாகும். பலஸ்­தீன மண்ணின் மைந்­தர்­களும் புதல்­வி­களும் அங்­கி­ருந்து அண்டை நாடு­களின் அகதி முகாம்­களை நோக்கி துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டனர். அதை மீறி அங்கு இருந்­த­வர்கள் இரண்டாம்தரப் பிர­ஜை­க­ளாக்­கப்­பட்­டனர்.
    பெரும் நம்­பிக்­கை­யோடு உரு­வாக்­கப்­பட்ட ஐ.நா. சபையை பெரிய நாடுகள் தமது தேவைக்­கேற்ப மிரட்டிப் பயன்­ப­டுத்தும் முறை இங்­கி­ருந்­துதான் தொடங்­கி­யது. அதனைத் தொடர்ந்து வந்த காலங்­களில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான பெரிய சக்­திகள் ஐ.நாவை அவற்றின் கரு­வி­யாகப் பல தட­வை­களில் பாவித்து வந்­தன. முஸ்லிம் நாடு­களை அழிக்­கவும் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை கொன்று குவிக்­கவும், இன்னும் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை அகதி முகாம்­க­ளுக்குள் சிறை­வைக்­கவும், முழு மத்­திய கிழக்­கையும் சின்னாபின்­ன­மாக்­கவும் கூட ஒரு கரு­வி­யாக ஐ.நா. பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
    பின்னர் 1967 ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தை அடுத்து எகிப்தின் சினாய் பாலை­வனப் பகுதி, காஸா பள்­ளத்­தாக்கு பகுதி, மேற்கு கரை பகுதி, ஜோர்­தானின் கிழக்கு ஜெரூ­ஸலம், சிரி­யாவின் கோலான் குன்று என்­ப­ன­வற்­றையும் இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டது. இந்த ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பூமி­களில் இஸ்ரேல் தனது நிலையை உறு­தி­யாகத் தக்க வைத்­துக்­கொள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்­பிய நாடுகள் முழு­மை­யான ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும் வழங்­கின. இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸட் 1981 டிசம்­பரில் சிரி­யாவின் கோலான் குன்றை தன்­னோடு இணைத்துக் கொள்ளும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­யது. அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இந்தப் புதிய இணைப்­புக்­களை எதிர்க்கும் வகையில் இஸ்­ரே­லுக்கு எதி­ராகத் தடை­களை கொண்டு வரும் பிரே­ரணை ஐ.நாவில் அறி­முகம் செய்­யப்­பட்­ட­போது அமெ­ரிக்கா தனது வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அதை தடுத்­தது.
    ஈரா­னுக்கும் ஈராக்­கிற்கும் இடையில் நீடித்த எட்டு வருட யுத்­தத்தின் போது பத்து லட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் கொல்­லப்­பட்­டனர். இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உட்­கட்­ட­மைப்­புக்கள் பல உருத் தெரி­யாமல் அழிக்­கப்­பட்­டன. இந்த எட்டு வருட கால­மாக ஐ.நா. எங்­கி­ருந்­தது என்­பது கூட எவ­ருக்கும் தெரி­யாது.
    1989இல் சோவியத் யூனியன் கட்­ட­மைப்பு சிதை­வுற்­றபின் நிலைமை மேலும் மோச­மா­னது. உதா­ர­ணத்­துக்கு 1990 வளை­குடா நெருக்­க­டி­யின்­போது ஐ.நாவை அமெ­ரிக்கா கடத்திச் சென்று வைத்­தி­ருந்­தது என்­றுதான் சொல்ல வேண்டும். தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வதில் அமெ­ரிக்கா தனிப்­பெரும் ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யது. அன்று முதல் ஐ.நா. தீர்­மா­னங்கள் புனி­த­மா­ன­வை­யா­கவும் சர்­வ­தேச சட்­டங்­களின் ஒரு அங்­க­மா­கவும் கரு­தப்­பட்­டன.
    1990ஓகஸ்ட் இரண்டில் குவைத் மீதான ஆக்­கி­ர­மிப்­புக்கும் 1991 ஜன­வரி 17இல் ஈராக் மீது அமெ­ரிக்கா தாக்­குதல் நடத்த தொடங்­கி­ய­தற்கும் இடையில் ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையில் அடுத்­த­டுத்து அவ­ச­ர­அ­வ­ச­ர­மாகக் குறு­கிய கால இடை வெளி­க­ளுக்குள் 12 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. குவைத்­திலி ருந்து ஈராக்­கிய படை­களை அகற்­றிக்­கொள்ள படைப் பலத்தை பாவிக்க மட்­டுமே ஐ.நா. அங்­கீ­கா­ர­ம­ளித்­தது. ஆனால் இதை மீறி இன்­னொரு ஐ.நா. தீர்­மா­னத்தைப் பயன்­ப­டுத்தி அமெ­ரிக்கா ஈராக்கை ஆக்­கி­ர­மித்து அந்த நாட்டின் மீது குண்­டு­மழை பொழிந்து நாட்­டையே சின்­னா­பின்­னப்­ப­டுத்­தி­யது. இதன் தொட­ராக அந்த நாட்டின் மீது யுத்த சூனிய வல­யத்தை பியோ­கித்து ஈராக்கை மூன்று துண்­டு­க­ளாக அமெ­ரிக்கா பிரித்­தது.
    அதனைத் தொடர்ந்து வந்த ஆண்­டு­களில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் நாடு­களின் ஆத­ர­வோடு அமெ­ரிக்கா ஈராக்கை மேலும் சிதைக்கும் வகையில் அந்த நாட்டின் மீது தடை­களைக் கொண்­டு­வரும் பிரே­ர­ணை­களை அமுல் செய்ய ஐ.நாவை தூண்­டி­யது. இந்த தடைகள் மூலம் ஈராக் மட்­டு­மன்றி ஈரான், சூடான், லிபியா, ஆப்­கா­னிஸ்தான் என எல்லா முஸ்லிம் நாடு­களும் இலக்கு வைக்­கப்­பட்­டன. இந்த தடைகள் இந்த நாடு­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு முடி­வில்­லாத துய­ரங்­க­ளையும் மர­ணத்­தையும் கொண்டு வந்­தன.
    பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இது­வரை இஸ்ரேல் 60க்கு மேற்­பட்ட தட­வைகள் யுத்தக் குற்­றங்­களைப் புரிந்­துள்­ளது. இஸ்­ரே­லுக்கு எதி­ராக 60க்கு மேற்­பட்ட தீர்­மா­னங்­களை ஐ.நா. நிறை­வேற்­றி­யுள்­ளது. ஆனால் அதில் ஒன்றுகூட இது­வரை அமுல் செய்­யப்­ப­ட­வில்லை. இவற்றுள் தீர்­மானம் இலக்கம் 242 மற்றும் 338 என்­பன பிர­தா­ன­மா­னவை. 1967 ஜுன் யுத்­தத்தின் மூலம் இஸ்ரேல் கைப்­பற்­றிய அரபு நாடு­களின் பகு­தி­க­ளி­லி­ருந்து அது வில­கிக்­கொள்ள வேண்­டு­மென இந்தத் தீர்­மா­னங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன.
    ஐக்­கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது முதல் இஸ்­ரேலின் இணைப்­பு­க­ளுக்கு எதி­ராக ஏதோ ஒரு வகையில் மாறி மாறி நூற்­றுக்­க­ணக்­கான தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இவை எல்­லாமே ஐ.நாவின் பழைய ஆவ­ணங்கள் பகு­தியில் தூசு படிந்த நிலையில் இன்­னமும் காணப்­ப­டு­கின்­றன.
    மூன்றாம் உலக நாடு­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்குத் துணை போவதில் ஐ.நாவும் ஒரு பங்­கா­ளி­யாகத் தொடர்ந்து செயற்­பட்டு வந்­துள்­ளது. உதா­ர­ணத்­துக்கு பொஸ்­னியா மோதலின் போது ஐ.நாவால் பாது­காப்பு வலயம் என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட செரப்­ர­னி­கா­வுக்கு அரு­கி­லுள்ள பகு­திக்­குள்தான் சுமார் எட்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு­வர்கள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் பெண்­களின் கற்பும் இதே பகு­திக்குள் வைத்து தான் சேர்­பி­யர்­களால் சூறை­யா­டப்­பட்­டன. கொன்று குவிக்­கப்­பட்­ட­வர்கள் இதே பகு­திக்­குள்தான் பாரிய புதை குழி­க­ளுக்குள் புதைக்­கப்­பட்­டனர்.
    செரப்­ர­னி­காவில் உள்ளூர் பொது­மக்­களைப் பாது­காக்க நிய­மிக்­கப்­பட்ட ஐ.நா. படை­பி­ரிவின் டச்சு படை வீரர்கள் முஸ்­லிம்கள் பலிக்­க­டாக்கள் போல் அறுக்­கப்­ப­டு­வார்கள் என்­பது தெரிந்தும் கூட அவர்­களைப் பிடித்து சேர்­பி­யர்­க­ளிடம் கொத்து கொத்­தாக ஒப்­ப­டைத்­தனர். மேற்­கு­லகும் ஐ.நா. சபையும் இந்த விட­யத்தில் பூரண அமைதி காத்­தன. இந்த அமைதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சேர்­பி­யர்­களின் படு­கொ­லைக்­கான திற­வ­லா­னதோர் அங்­கீ­கா­ர­மா­கவே அமைந்­தது.
    பல்கன் பிர­தே­சத்­தி­லி­ருந்து முஸ்­லிம்­களை அழித்­தொ­ழிக்கும் அவர்­க­ளது முயற்­சியில் பொஸ்­னி­யாவின் மூன்று லட்­சத்­துக்கும் அதி­க­மான முஸ்லிம் ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் சிறு­வர்­க­ளையும் எந்­த­வி­த­மான வயது வித்­தி­யா­சமும் பால் வித்­தி­யா­சமும் இன்றி அவர்கள் கொன்று குவித்­தனர். இரு­பது லட்­சத்­துக்கும் அதி­க­மான முஸ்­லிம்­களை அருகில் உள்ள பயங்­கர காட்டுப் பகு­தி­களை நோக்கி விரட்­டி­ய­டித்­தனர். தமது குடும்­பத்­த­வர்கள் முன்­னி­லை­யி­லேயே மிரு­கங்­க­ளை­விடக் கேவ­ல­மான முறையில் கொன்று குவிக்­கப்­பட்ட முஸ்லிம் ஆண்­க­ளி­னதும் பெண்­க­ளி­னதும் அழு­கு­ரலும் அவலக் குரலும் பூட்ரஸ் பூட்ரஸ் காலியின் (அப்­போ­தைய ஐ.நா. செய­லாளர்) செவி­க­ளுக்கோ அல்­லது வாய் கிழிய மனித உரி­மைகள் பற்றி பேசும், போதிக்கும் ஐரோப்­பிய தலை­வர்­களின் செவி­க­ளுக்கோ எட்­டவே இல்லை.
    இந்த விட­யத்தில் ஐ.நா. அதன் நம்­ப­கத்­தன்­மையை முழு­மை­யாக இழந்து நின்­றது. பொஸ்­னி­யா­வுக்கு எதி­ராக ஆயுத, தடையைக் கொண்­டு­வந்து முஸ்­லிம்கள் தமது உயிரைப் பாது­காக்க எதிர்த்து நிற்கும் உரி­மையை கூட அவர்­க­ளுக்கு வழங்க மறுத்­தது. ஆனால் சேர்­பிய வெறி­யர்­க­ளுக்கு முஸ்­லிம்­களை கொன்று குவிக்க, சித்­தி­ர­வதை செய்ய, கற்­ப­ழிக்க, துரத்தி அடிக்க அவர்­களின் சொத்­துக்­களை அழிக்க என எல்­லா­வற்­றுக்கும் தேவை­யான ஆத­ரவு வழங்­கப்­பட்­டது.
    இந்தச் சம்­பவம், அதா­வது பொஸ்­னிய படு­கொ­லைகள் ஐ.நாவுக்கு என்­றென்றும் தீராத அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை பிற்­கா­லத்தில் ஐ.நா. செய­லாளர் நாயகம் கொபி அனான் ஒப்புக் கொண்­டி­ருந்தார். “பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சர்­வ­தேச பாது­காப்பில் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தனர்.
    ஆனால் நாம் சர்­வ­தேச சமூகம் அவர்­களை மோச­மாக கைவிட்டோம்” என்று ஐரோப்­பிய யூனி­யனின் செய­லாளர் ஜாவியர் சொலா­னாவும் பிற்­கா­லத்தில் தெரி­வித்­தி­ருந்தார். ‘இது ஒட்டு மொத்த வெட்­கக்­கே­டான கூட்டு தோல்­வி­யாகும்’ என்­ப­துதான் அவரின் வார்த்­தைகள்.
    ஐக்­கிய நாடுகள் சபை தோற்றுப் போன ஒரு அமைப்பு என்­பது இதன் மூலம் ஒப்புக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. இரண்டாம் உலகப் போரின் வெற்­றி­யா­ளர்கள் என தம்மை பற்றி பிதற்­றிக்­கொள்ளும் நாடு­களின் பிடி­யி­லி­ருந்து பாது­காப்புச் சபை விடு­விக்­கப்­பட வேண்டும்.
    அதற்­கேற்­ற­வாறு உண்­மை­யான காலத்­துக்கு தேவை­யான மறு­சீ­ர­மைப்­புக்கள் ஐ.நா. கட்­ட­மைப்பில் செய்­யப்­பட வேண்டும். காலத்­துக்­கேற்ற தீவிர மாற்­றங்கள் அறி­முகம் செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை கொபி அனான் 2006 பெப்­ர­வ­ரியில் முன்­வைத்­துள்ளார்.
    மீண்டும் நியு­யோர்க்­கிலும் வாஷிங்­ட­னிலும் இடம்­பெற்ற செப்­டம்பர் 11 சம்­ப­வத்தின் தொட­ராக ஐ.நாவை தனது தேவைக்­கேற்ப அப்­போ­தைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் புஷ் பயன்­ப­டுத்­தினார். முதலில் ஆப்­கா­னிஸ்­தா­னையும் பின்னர் ஈராக்­கையும் ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கான தனது திட்­டத்தை நியா­யப்­ப­டுத்தும் வகையில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற அவர் ஐ.நாவை பயன்­ப­டுத்திக் கொண்டார். இந்த தீர்­மா­னங்­களை நிறை­வேற்றும் விட­யத்தில் கூட சிறிய நாடு­களை அச்­சு­றுத்­தியே அமெ­ரிக்கா தனது காரி­யத்தை சாதித்துக் கொண்­டது. இதற்­காக அர­பு­லக சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்கள் பல­ருடன் திரை­ம­றைவு கொடுக்கல் வாங்­கல்கள் பல இடம்­பெற்­றன. இந்தக் கொடுக்கல் வாங்கல் கார­ண­மாக ஆப்­கா­னிஸ்­தா­னிலும் ஈராக்­கிலும் தமது சகோ­த­ரர்கள் குண்­டு­க­ளுக்கும் ஏவு­க­ணை­க­ளுக்கும் முகம் கொடுப்­பதை கண்­டு­கொள்­ளாமல் குரு­டர்­க­ளா­கவே இருந்து விட்­டனர்.
    பின்னர் பிரிட்­டனும் பிரான்ஸும் இணைந்து கொண்­டு­வந்த தீர்­மா­னத்தின் மூலம்தான் அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் இணைந்து லிபி­யாவை அழிப்­ப­தற்­கான அடித்­தளம் இடப்­பட்­டது. மக்கள் மிகவும் அமை­தி­யாக அதி உயர் வாழ்க்கைத் தரத்­துடன் சகல வச­தி­க­ளு­டனும் வாழ்ந்து வந்த லிபி­யாவில் இன்று இரத்த ஆறு ஓடு­கின்­றது. இவ்­வா­றுதான் கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் ஐரோப்­பிய நாடு­களும் இணைந்து மேற்­கொண்ட எல்லா தாக்­கு­தல்­க­ளிலும் எல்லா யுத்­தங்­க­ளிலும் ஐ.நா. பலிக்­கடா ஆக்­கப்­பட்­டுள்­ளது. இந்த யுத்­தங்கள், தாக்­கு­தல்கள் என எல்­லாமே ஐ.நா. தீர்­மா­னங்­களின் மூலம் தான் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
    இன்று அமெ­ரிக்­காவும் ரஷ்­யாவும் இணைந்து சிரி­யாவை அழித்துக் கொண்டு இருக்­கின்­றன. இதன் கார­ண­மாக மரணம், அழிவு என்­ப­ன­வற்­றுக்கு மேல­தி­க­மாக இங்கும் சகல வச­தி­க­ளோடும் வாழ்ந்த மக்கள் அடுத்த வேளை உண­வுக்­காக உடுத்த உடை­யுடன் உலகில் கையேந்தி நிற்கும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இன்றும் கூட துர­திஷ்­ட­வ­ச­மாக சிரியா மற்றும் யெமன் தேச மக்­களை காப்­பாற்ற முடி­யாத கையா­லா­காத நிலை­யி­லேயே ஐ.நா. காணப்­ப­டு­கின்­றது.
    மலே­ஷி­யாவின் முன்னாள் பிர­தமர் மஹதிர் மொஹமட், தென் ஆபி­ரிக்­காவின் தன்­னி­க­ரற்ற தலைவர் நெல்சன் மண்­டேலா ஆகி­யோரைத் தவிர ஐக்­கிய நாடுகள் சபையின் கையா­லா­காத்­த­னத்தை சுட்­டிக்­காட்டி அதைக் கண்­டித்துப் பேசும் வலிமை உலகின் எந்தத் தலை­வ­ருக்கும் இது­வரை வரவில்லை. ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு மஹதிர் மொஹமட் சவால் விட்டார். பாதுகாப்புச் சபையில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளிடம் மட்டும் வீட்டோ அதிகாரம் இருப்பதை அவர் வன்மையாகக் கண்டித்தார். ஏகாதிபத்தியவாதமும் பொம்மை அரசுகளும் உலகில் மீண்டும் துளிர்விட ஐ.நா. காரணமாக இருப்பதாக அவர் வன்மையாகக் கண்டித்தார்.
    ஐ.நாவின் மூலப் பிரச்சினை பற்றி கருத்து வெளியிட்ட மஹதிர் “ஐ.நாவின் அங்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பொம்மை ஆட்சியாளர்கள் தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்யும் வகையில் அதன் எல்லா அங்கங்களும் கட்டமைப்புக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாடுகள் மீது ஒரு குறிப்பிட்ட நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் அடக்குமுறைகள், நிச்சயமற்ற நிலைமைகள் மற்றும் அச்ச நிலைமைகள் என்பன தோற்றம் பெறுகின்றன” என்று கூறினார்.
    தற்போது பிரச்சினைக்குரிய காஷ்மீர் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் காஷ்மீர் முஸ்லிம்களின் தன்னாதிக்க நிலையை வலியுறுத்தி ஐ.நாவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    ஆனால் அவற்றை அமுல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக இந்தியா மீண்டும் அதன் காட்டுமிராண்டித்தனத்தை காஷ்மீரில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. வழமைபோல் ஐ.நா. இன்றும் மௌனமாகவே உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சட்டவிரோதமான எல்லா யுத்தங்களையும் சட்டமயமாக்கிய ஐக்கிய நாடுகள் சபை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top