• Latest News

    October 06, 2016

    சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

    ( யு.கே.காலித்தீன் - எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
    ஆசிரியர்கள் மாணவர்களால் இனிப்புகள் வழங்கி  வரவேற்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவமுகாமொன்றும்  இன்று  ( 6 )  கல்லூரி அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் மற்றும் பழைய மாணவ சங்கத்தின் செயலாளர்இபொறியியலாளர் எம்.ஸி. கமால் நிஷாத்  ஆகியோரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க  கல்முனைபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரிஎன். ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.இம் மருத்துவ முகாமில் கல்லூரியின் பழைய மாணவர்களான டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக்  எம்.ஏ.ஸி.எம்.அனஸ்  எம்.எம்.அல் அமீன் றிஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்ற மெதுவான துவிச்சக்கரவண்டியோட்டம் . மெதுவான மோட்டார் சைக்கிளோட்டப் போட்டி  கயிறுழுத்தல்  வலைக்குள் பந்து போடுதல்  கிறிக்கட் போட்டி என்பன இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கான பாராட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதே வேளை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கொழும்பு கிளையினரால் சர்வதேச  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்று கொழும்பில் வசிக்கும் ஆசிரியர்களின் வீடு வீடாகச் சென்று இலவச மருத்துவ பரிசோதனை செய்துசிகிச்சையளிக்க இருப்பதாக கொழும்பு கிளையின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.மைஸான் தெரிவித்தார்.








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top