• Latest News

    November 25, 2017

    தாழ­முக்கம் இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும் பாதிக்கும்

    மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­ட  தாழ­முக்கமானது, இலங்கையின் கரை­யோ­ரங்­களையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம் உள்­ள­தா­கவும்  கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

    இதனால்,  எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலையால், இடி­யுடன் கூடிய கன­மழையும், கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் எனவும்  கால­நிலை அவ­தான நிலையம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

    மேற்கு வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் கார­ண­மாக இலங்கை மற்றும் தென்­னிந்­திய பகு­திகள் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டலாம் எனவும் இலங்­கையில் கரை­யோரப்பகு­திகள் அதிக தாக்­கத்­திற்கு முகங்­கொ­டுக்க நேரி­டலாம் எனவும் எதிர்­வு­ கூ­றப்­ப­டு­கின்­றது.

    எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல்களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தாழ­முக்கம் இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும் பாதிக்கும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top