• Latest News

    February 10, 2018

    அம்பாரை மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக இடம்பெற்றது.

    அம்பாரை மாவட்டத்தில் தேர்தல் சுமூகமாக இடம்பெற்றது. தற்போது வட்டாரங்களின் மத்திய வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகிறது.

    அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய இரு மாநகர சபைகளுக்கும்,  அம்பாரை நகரசபைக்கும், 17 பிரதேச சபைகளுக்குமாக 20 உள்ளூராட்சி சபைகளுக்குமாக  தேர்தல் நடைபெற்றது.

    அம்பாரை மாவட்டத்தில் 493,742 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். 20 உள்ளூராட்சி சபைகளுக்குமாக 378 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 529 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    மேற்படி உள்ளூராட்சி சபைகளில் 642 பெண் வேட்பாளர்கள் உட்பட 2837 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இவர்களிலிருந்து 91 பெண் வேட்பாளர்கள் உட்பட 378 பேர் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரை மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக இடம்பெற்றது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top