• Latest News

    March 12, 2018

    பேஸ்புக் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அத்தியாவசியம்

    அத்தியாவசியமென்று தெரிவித்த மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட உள்ளன என்றும் கூறினார். 

    கண்டி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமையை அடுத்து, சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றனவும் சமூக வலையிகளான வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றனவுக்குத் ​தடை விதிக்கப்பட்டு முடக்கப்பட்டன.

    இருப்பினும், இவை மீண்டும் செயற்படும் நாள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில், அமைச்சரிடம் கேட்ட போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், உலகில், வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில், இந்த சமூக வலைத்தளங்களைச் செயற்படுத்த இடமளிக்காமல், முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதற்கு, சீனாவே சிறந்த உதாரணமென, குறிப்பிட்டார்.

    உண்மையில், பேஸ்புக் வலைத்தளத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், இது தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டிய கட்டாயமுள்ளதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    எந்தவொரு விடயமாயினும், அது, நாட்டுக்குத் தேவயான அல்லது நல்லதாயின், அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறிய அமைச்சர் அமரவீத, ஆனால், நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் விடயமாயின், அது தொடர்பிலான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியது அத்தியாவசியமென்றும் எவ்வாறியினும், பேஸ்புக்குக்குத் தடை விதிப்பதை விட, கட்டுப்படுத்துவதே அவசியமென்றும் கூறினார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பேஸ்புக் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அத்தியாவசியம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top