• Latest News

    April 23, 2019

    சகல பாடசாலைகளும் இம்மாதம் 29ஆம் திகதியே ஆரம்பம் - கல்வி அமைச்சர்

    நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு சகல அரசாங்க பாடசாலைகளும் 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். 

    சகல அரசாங்க பாடசாலைகளும் 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களால் 22ஆம் 23ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே கல்வி அமைச்சர் இந்த அறிவித்தலைச் செய்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சகல பாடசாலைகளும் இம்மாதம் 29ஆம் திகதியே ஆரம்பம் - கல்வி அமைச்சர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top