கடந்த ஒரு மாத காலமாக திட்டமிட்டு சில இனவாத ஊடகங்கள் இந்த நாட்டுக்கு செய்திகளைக் காட்டியது. இன்னும் பொறுமையாக இருக்கின்றீா்கள் போய் முஸ்லீம் சமூகத்தைத் தாங்குங்கள் நொறுக்குங்கள் பற்ற வையுங்கள் என்றே அவா்களது செய்திகள் நாளாந்தம் உசுப்பேற்றிக் கொண்டிருந்தன.
அந்த ஊடகங்களின் தலைமைகள் எதிா்காலத்தில் தோ்தலில் குதிப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். செய்திகைளைப் பார்ப்பதற்கு முன்னர் அந்த ஊடகம் யாருடையது? என முதலில் அறிந்து கொண்டு அவா்களது செய்தியை அவதானியுங்கள் அந்தச் செய்தியில் உண்மைத் தன்மையுள்ளதா? எனப் பாருங்கள்

0 comments:
Post a Comment