• Latest News

    March 22, 2020

    பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 14ம் திகதிக்கு பின்னர் நடைபெறும்

    பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 14ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 25ம் திகதியன்று நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்தல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டது.

    இந்தநிலையில் தேர்தல் சட்டப்படி ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்னர் வரும் 14 நாட்களுக்குள் தேர்தல் திகதியை ஆணைக்குழு அறிவிக்கும்.

    இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 14ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top