இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்
அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது அலுவலகத்தில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களும் சுய
தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள்
தெரிவித்துள்ளன.
பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டதும், அவரது தனிமைப்படுத்தல்
காலமானது எப்போது முடிவடையும் என்பது அவரது மருத்துவர்களுடனான
ஆலோசனைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தற்போது 4,347 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன், 16 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment