• Latest News

    April 08, 2020

    ஒரே நாளில் 936 பேரின் உயிரைப் பறித்த கொரோனா - மே மாதம் வரை முடங்கும் பிரித்தானியா

    பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தால் மேலும் 936 மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானியா இன்று அறிவித்துள்ளது.

    இதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,095 ஆக உயர்வடைந்துள்ளது.

    இந்த அதிகரிப்பானது நாட்டின் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    பிரித்தானிய வைத்தியசாலைகளில் 22 முதல் 103 வயது வரையிலான 828 பேர் இறந்துள்ளதாக NHS உறுதிப்படுத்தியுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஸ்கொட்லாந்தில் மேலும் 77 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 336 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. வேல்ஸில் மேலும் 284 குடிமக்கள் நேர்மறை சோதனைக்கு உட்பட்டதாகவும், 33 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பொது சுகாதார துறை அறிவித்தது. வடக்கு அயர்லாந்தில் மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

    பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மிக மோசமான தினசரி மரணங்களில் இன்று 936 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்கான நேர்மறையான பரிசோதனையில் இதுவரை 55,000 க்கும் அதிகமானவர்கள் இனம் காணப்பாட்டாலும், சோதனையின் பற்றாக்குறை காரணமாக உண்மையான பரவுகையைின் அளவை நாம் ஒருபோதும் அறிந்திருக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    பிரித்தானியாவின் முடக்கல் நடவடிக்கை மே மாதம் இறுதிவரைக்கும் தொடரும் எனவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரே நாளில் 936 பேரின் உயிரைப் பறித்த கொரோனா - மே மாதம் வரை முடங்கும் பிரித்தானியா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top