• Latest News

    April 10, 2020

    முஸ்லிம் சமூகம் மீது விரல்நீட்டுவது வருத்தமளிக்கிறது: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

    முஸ்லிம் சமூகமே நோயை பரப்புகின்றது போன்ற கருத்துக்களை ஊடகங்கள் முன்வைப்பது வருத்தமான விடயமாகும். ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை இலக்குவைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    புத்திஜீவிகள் அமைப்பான வேர்டிசீசேர்ச் ஏற்பாட்டில், மந்திரி எல்.கே. பேஸ்புக் பக்கத்தில் காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் நேற்று (09) நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    கொரோனா வைரஸில் இருந்து நாட்டை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் விதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக இதில் தங்களது விவாதங்களை முன்வைத்தனர்.

    இதில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

    முஸ்லிம்கள் எவரும் கொரோனா வைரஸ் காணமாக உயிரிழந்தால் அவர்களை நல்லடக்கம் செய்யும் முறைமை குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாம் கூறியும் இன்னமும் அதற்கான குழு நியமிக்கப்படவில்லை.
    • இந்த சந்தர்ப்பத்தில் முறையான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி, அனைவரையும் அரவணைத்து செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. இதற்கு மாற்றீடாக கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றது. எனினும் இவையனைத்துமே ஊடக நிகழ்வாக மட்டுமே மாறியதே தவிர, மக்களின் பிரச்சினைகள் சரியாக ஆராயப்படவில்லை.
    மக்கள் பக்கமுள்ள பிரச்சினைகள் எம்மால் எழுப்பப்பட்டது. இப்போது முஸ்லிம் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்ககான உணவு, மருந்து பறிமாற்றம் எதுவும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கம் இதனை சரியாகச் செய்யவில்லை. பள்ளிவாசல், சிவில் அமைப்புக்கள் மூலமாக ஓரளவு உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாறாக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

    அதேபோல் ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தையே இலக்கு வைத்து விமர்சனம் செய்கின்றனர். முஸ்லிம் சமூகம் நோயை பரப்புகின்றது என்ற கருத்துக்களை ஊடகங்கள் முன்வைப்பது வருத்தமான விடயமாகும்.

    சுனாமி நேரத்தில் நிலைமைகளை கையாள விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது பல நெருக்கடிகள் இருந்தாலும் கூட அவ்வாறான முறைமை ஒன்றினை கையாள நினைத்தோம்.

    இப்போதுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளை நிராகரித்து, ஒரு பக்கச்சார்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது மோசமானதாகும். இந்த நெருக்கடியை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு செயற்படுவதை தவிர்த்து, அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

    மேலும், முஸ்லிம்கள் எவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தால், அவர்களை நல்லடக்கம் செய்யும் முறைமை குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாம் கூறியும் இன்னமும் அதற்கான குழு நியமிக்கப்படவில்லை.

    அதேபோல் நீரினால் கொரோனா வைரஸ் பரவாது என உலக சுகாதார ஸ்தாபனமே கூறியுள்ளது. உலகில் அனைத்து நாடுகளும் சடலத்தை புதைக்கும் முறைமையை பின்பற்றும்போது, நாம் மட்டும் ஏன் அதனை நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வி இப்போது எல்லோர் மத்தியிலும் உள்ளது என்றார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் சமூகம் மீது விரல்நீட்டுவது வருத்தமளிக்கிறது: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top