• Latest News

    February 21, 2021

    ஷானி அபேசேகர மீதான ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறார் கோட்டாபய! - ஹரின் பெர்னாண்டோ

    இருதய நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இரண்டு ஸ்டென்ட் பொருத்த வேண்டிய நிலைமையில், ஒரு ஸ்டென்ட் பொருத்தப்பட்டு, அன்றைய தினம் இரவே மீண்டும் வெலிகடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

    ஷானி அபேசேகர என்பவர் நேர்மையான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். இந்த நேர்மையான அரச ஊழியருக்கு பின்னால் ஒருவர் துரத்தி செல்கிறார்.

    குறிப்பாக நந்தசேன கோட்டாபய ராஜபக்ச, பதவிக்கு வந்த நாளில் இருந்து ஷானி அபேசேகர என்ற நபர் மீது கோபம் கொண்டு செயற்பட்டு வருகிறார். இதனை எம்மால் காணக் கூடியதாக இருக்கின்றது.

    ஷானி அபேசேகர முதலில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

    ஷானி அபேசேகர என்ற அதிகாரி நேர்மையான புகழ்பெற்ற அதிகாரி. நாட்டில் நடந்த அனைத்து சம்பங்கள் குறித்தும் நேர்மையான விசாரணைகளை நடத்தியவர்.

    ஷானி அபேசேகர மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து சிறையில் அடைத்தனர். அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஷானி அபேசேகர மீதுள்ள கோபம் என்ன?. இந்த அதிகாரி எமது அரசாங்கத்தின் காலத்திலும் எந்த அரசியல்வாதிக்கும் அடிப்பணியாது கடமையாற்றினார்.

    அவர் செய்த விசாரணைகள் காரணமாக ஆத்திரமடைந்துள்ள கோட்டாபய ராஜபக்ச அந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதையே காண முடிகிறது எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

    Thanks: Tamilwin.com

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஷானி அபேசேகர மீதான ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறார் கோட்டாபய! - ஹரின் பெர்னாண்டோ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top