யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருது
தஃவா இஸ்லாமிய்யா கலா பீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா அல்ஹிலால்
வித்தியாலத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (13) ஞாயிற்றுக் கிழமை
இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது கலாபீடத்தின் பிரதி தவிசாளரும், ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல். அப்துல் மஜீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக மேஸிலங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷேய்க்
என். ஹசன் சியாத் (நளிமி) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும்
நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.
கௌரவ
அதிதிகளாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஐம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர்
அஷ்ஷேய்க் எம்.எம். சலீம் (சர்க்கி), தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் முன்னாள்
தவிசாளர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம். காசிம் (ஹியாதி), சாய்ந்தமருது
முகையதீன் ஜும்ஆ பெரிய
பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டதோடு
பிரித்தானியாவிலிருந்து சூம் தொழிநுட்பத்தினூடாக நிகழ் நிலைஉரை நிகழ்த்திய
தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தவிசாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான அஷ்ஷேய்க் என்.எம். அப்துல் முஜிப் (நளிமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புதிய
பாடத்திட்டத்தின் பிரகாரம் குறுகியகாலத்தில் முழுக்குர்ஆனையும் மனனம்
செய்து 15 தௌராக்களை முழுமையாக பூரணப்படுத்திய அல்ஹாபில்களான முஹம்மது
வசீர் முஹம்மது அஹ்சன் மற்றும் ஜலாலுத்தீன் அப்துல்லாஹ் செய்யினி
ஆகியோருக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை
விஷேட அம்சமாகும்.
அத்தோடு
அல் குர்ஆன் மனன பாடங்கள் விருது, பாடசாலை மட்ட பரிட்சைகளில் சிறந்த
பெருபேர்கள் பெற்றவர்களுக்கான விருது, சிறந்த வரவை பெற்றவர்களுக்கான
விருது, மாணவத் தலைவர்களுக்கான விருது, முன் மாதிரி மாணவர் விருதுயென
பல்துறையிலும் திறமையை வெளிக்காட்டிய 43 மாணவர்களுக்கு நினைவுச்
சின்னங்களும், சான்றிதழ்களும் பதக்கங்களும் அதிதிகளால் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வில் உலமாக்கள், சாய்ந்தமருது முகையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர், பொருளாலர், தஃவா இஸ்லாமிய்யா கலா பீடத்தின் ஆளுனர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment