• Latest News

    May 27, 2023

    மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் 2023 விருது வழங்கல் விழா

     அபு அலா -

     

    மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் வருடாந்தம் நாடாத்திவரும் 2023 விருது வழங்கல் விழா (20) கொழும்பு BMICH மண்டபத்தில் அதன் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்றது.

     

    இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக இந்திய நாட்டைச் சேர்ந்த ஆசிய நாடுகளுக்கான சேவைகள், அரசியலமைப்பு மற்றும் பாதுகாவலர் அமைப்பின் வெளியுறவு அமைச்சர் பி.ஐயப்பன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், இந்திய நாட்டின் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான டொக்டர் கே.எம்.சென்தூர் பாண்டியன், சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் பிரதம ஆலோசகர் டொக்டர் மோகன் லால் அஜிகுமார் அத்மா உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

     

    தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திவருகின்ற ஆளுமைகளை வருடாந்தம் கௌரவித்து வருகின்ற செயற்பாடுகளை மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தவராது செய்து வருகின்றது. அதற்கினங்க, இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் 60 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

     

    இம்முறை தெரிவு செய்யப்பட்டவர்களில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் கடந்த வருடம் சுற்றுச் சூழல் தொடர்பாக பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை தொடராக எழுதியமைக்காகவும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (துஷாரா) கடந்த வருடம் ஆயுள்வேத மருத்துவ மூலிகை கட்டுரைகளை தொடராக எழுதியமைக்காகவும் இரு ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.







     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் 2023 விருது வழங்கல் விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top