பண்டார நாயக்க சர்வதேச மண்டபத்தில் (BMICH) அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுற்றாடல் முன்னோடி விருது வழங்கும் விழா இன்று 11ஆம் திகதி நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் ஒரு பாடசாலையில் இருந்து அதிக (11) விருதுகளைப் பெற்ற முதல் பாடசாலையாக இப்பாடசாலை சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் இருந்து 11 மாணவிகள் இவ்விருதினைப் பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டிய பாடசாலையின் சுற்றாடல் பொறுப்பாசிரியரும் நிந்தவூர் கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் திருமதி ஹிதாயா ஷபீக் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இச்சாதனையை படைப்பதற்கு காரணமாக திகழ்ந்த பொறுப்பாசிரியர், சுற்றாடல் கழகத்தின் ஏனைய ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கும், சுற்றாடலுக்கு பொறுப்பாக செயற்படும் கல்முனை வலய பொறுப்பாளர்களுக்கும் பாடசாலையின் அதிபர் தேசமானிய ஏ.எல்.நிஸாமுதீன் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றார்.
0 comments:
Post a Comment