• Latest News

    September 16, 2013

    வடக்கில் சிவில் நிர்­வாகம் இல்லை எல்லாம் இராணுவ மயமாக்கல்; விஜித ஹேரத்

    வடக்கில் தற்­போது சிவில் நிர்­வாகம் இல்லை. அனைத்தும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இது இல்­லாது ஒழிக்­கப்­பட வேண்டும் என ஜே.வி.பி.யின் பிர­சார செய­லா­ளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரி­வித்தார்.
    தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது தெற்கு சிங்­கள இன­வா­தி­க­ளுக்கு சாத­க­மான தன்­மையை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.
    இது தொடர்­பாக விஜித ஹேரத் எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்,
    வடக்கில் இரா­ணு­வத்­தி­னரை முழு­மை­யாக முகாம்­க­ளுக்குள் முடக்க முடி­யாது. ஆனால், சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணு­வத்தின் தலை­யீடு அதி­க­ரித்­துள்­ளது. இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
    சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணு­வத்தின் தலை­யீட்டை இல்­லாது செய்து மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தை வழங்க வேண்டும்.
    இரா­ணுவம் ஆளும் தரப்பு வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இது தொடர்பில் தேர்­தல்கள் ஆணை­யா­ளரின் கவ­னத்­திற்கு முன் வைப்போம்.
    தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் பிரி­வினை வாதத்தை ஊக்­கு­விப்­ப­தாக உள்­ளது. இதனை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றோம்.
    இவ் விஞ்­ஞா­ப­னத்தின் மூலம் கூட்­ட­மைப்பு அரசில் உள்ள சிங்­கள இன­வா­தி­க­ளுக்கு சாத­க­மான களத்தை அமைத்­துக்­கொ­டுத்­துள்­ளது. இதன் மூலம் நாட்­டுக்குள் மீண்டும் இன­வாதம் தலை­தூக்கும் ஆபத்து தலை­தூக்­கி­யுள்­ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கில் சிவில் நிர்­வாகம் இல்லை எல்லாம் இராணுவ மயமாக்கல்; விஜித ஹேரத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top