மேற்கு நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள்
பல மக்கள் அங்கு செல்லாமையால் மூடப்பட்ட நிலையில் பல கத்தோலிக்க
தேவாலயங்கள் விற்பனைக்கு விடப்பட்டநிலையில் முஸ்லிம்கள் அவற்றை வாங்கி மஸ்ஜித்துக்களாக மாற்றும் நிலை பல இடம்களிலும் இடம்பெற்று வருகிறது .
இந்த தொடரில் அண்மையில் பிரிட்டனின்
ஸ்டபொர்ட் ஷெயாரில் உள்ள சென் பீட்டர்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தையும்
முஸ்லிம்கள் வாங்கியுள்ளனர். தேவாலயம் மூடப்பட்டதையடுத்து முஸ்லிம்கள் அதனை
வாங்கியதாக பிரிட்டிஷ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விற்பனை மூலம்
கிடைக்கப்பெறும் பணம் கிறிஸ்தவர்களின் நன்மைக்கு பயன்படுத்தப்படும் என்றும்
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஐரோப்பாவில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம் உள்ளமை ஆய்வுகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment