• Latest News

    November 04, 2013

    'சந்தன மரம்' நூல் அறிமுக விழா

     பி.எம்.எம்.ஏ.காதர்;
    புரவலர் புத்தகப் பூங்காவின் 33வது நூல் வெளியீடான மருதமுனை கலாபூஷணம் அ.மு.பாறூக் எழுதிய மொழி பெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பு நூலான 'சந்தன மரம்' நூல் அறிமுக விழா நேற்று (03-11-2013) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ றஸாக், ;கலந்து கொண்டார். நூலின் முதற் பிரதியை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். முகர்ரப் பெற்றுக்கொண்டார்.
    கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், ஆசிரியர் ஜெஸ்மி எம். முஸா, கவிஞர்களான மருதமுனை ஹஸன், எம்.எம்.விஜிலி,அன்புடீன், மு.சடாட்சரன், செங்கதிரோன்,அக்கரைப்பாக்கியன், .ஆகியோர் உரையாற்றினார்கள். நூலாசிரியர் அ.மு.பாறூக்,ஏற்புரை வழங்கினார்.முகம்மது நாபி முகம்மது முஸ்னி நன்றியுரையாற்றினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'சந்தன மரம்' நூல் அறிமுக விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top