• Latest News

    November 18, 2013

    மட்/மம/மாக்கான் மாக்கார் வித்தியாலயம் பொன் விழாவை கொண்டாடுகின்றது

    ஏறாவூர், மீராகேணி  மட்/மம/மாக்கான் மாக்கார் வித்தியாலயம் எதிர்வருகின்ற 22.11.2013 அன்று தனது பொன் விழாவை கொண்டாடுகின்றது. ஏறாவூர் பிரதேசதிற்கும், ஊருக்கும்  கல்வி,கல்விசாரா விடயங்களில் பல்வேறு மகத்தான பங்களிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    அண்மை காலமாக இப்பாடசாலை சகல துறைகளிலும் ஏறாவூரை பிரதிநிதிதுவப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகின்றது.
    இவ்வாறான சாதனைகளை புரிந்து வரும் மட்/மம/மாக்கான் மாக்கார்வித்தியாலயமானது எதிர்வரும் 2013-11-22ம் திகதி 50வது ஆண்டில் காலடி வைக்கின்றது.
    இதனை சிறப்பிக்கும் முகமாக பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களால் பாடசாலையில் பொன் விழாவும்,சஞ்சிகை வெளி இடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    எனவே பாடசாலையின் பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள், ஊர் மக்கள் அனைவரும் இவ் விழாவில் பங்கு கொள்வதுடன் பொன் விழா சிறப்பாக நடைபெற தன்னால் முடிந்த முழு பங்களிப்புகளை வழங்கி பொன் விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக அமையுமாறு பாடசாலையின் பொன்விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்/மம/மாக்கான் மாக்கார் வித்தியாலயம் பொன் விழாவை கொண்டாடுகின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top