• Latest News

    November 23, 2013

    பதுறுத்தீனின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    பி.எம்.எம்.பதுறுத்தீனின் சேவையைப் பாராட்டி மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை அபிவருத்திச் சபையினர் ஒன்றிணைந்து அவரை கௌரவித்து, பாராட்டிய நிகழ்வு ஒன்று பாடசாலையில் அதிபர் ஏ. குனுக்கத்துள்ளா தலைமையில் நடைபெற்றது.
    இதில்  பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.எம்.எம்.பதுறுத்தீன் மாலைகள் அணிவித்து பேன்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பொன்னாடைகள் பல போர்த்தி, வாழ்த்துப்பத்திரம் மற்றும் நினைவுப்பரிசுகளும் பொன்முடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அத்துடன்; அவர்பற்றிய தகவல்களுடன் கூடிய 'மகிமை' என்ற நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
    இந்த நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப்;பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல்.பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ. றகீம்  கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான வி.மயில்வாகனம். ஏ.சி.எம்.தௌபீக், எம்.எஸ்.சஹூதுல் நஜீம,; உதவிக்; கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், முன்னாள் அதிபர் எஸ்.எல். இப்றாலெப்பை உள்ளீட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பதுறுத்தீனின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top