• Latest News

    February 07, 2014

    கல்முனை மாநகர சபையில் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவம்

    எம்.வை.அமீர்;
    கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவம் இன்று காலை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.

    மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.எம்.றியாஸ் மற்றும் மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோர் உட்பட அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
    இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் விசேட வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது.

    முதல்வர் நிசாம் காரியப்பர் அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இவ்வைபவத்தில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையில் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top