• Latest News

    April 08, 2014

    தனது சொத்துக்களை விற்றே தான் இப்போது வாழ்க்கை நடாத்துவதாக கூறுகிறார் முன்னாள் ஜனாதிபதி!

    தான் தற்போது தனது பெற்றோர் தனக்கு வழங்கிய சொத்துக்களை விற்றே வாழ்க்கை நடாத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிடுகிறார்.

    எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற கூடமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

    வாழ்க்கை முழுதும் பதவியில் நிலைகொள்ளுமாறு தான் யாப்பை மாற்றவில்லை எனவும், யாரோ அவ்வாறு செய்திருப்பதனால் தனக்கு மீண்டும் அரசியலில் நுழைவதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

    தான் பதவி விலகும்போது மிகவும் ஏழையாக இருந்ததாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனது சொத்துக்களை விற்றே தான் இப்போது வாழ்க்கை நடாத்துவதாக கூறுகிறார் முன்னாள் ஜனாதிபதி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top