• Latest News

    April 08, 2014

    கல்முனையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்

    அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரையிலுள்ள பழைய ஜஸ்வாடிக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
    இச்சடலத்தை செவ்வாய்க்கிழமை (08) காலை கண்ட பொதுமக்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
    சம்மாந்துறை, இ – 137 பௌசிமாவத்தையைச் சேர்ந்த எம்.நஸீம்( வயது 30 )
    என்பவரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
    இவர் கல்முனை கடற்கரைப்பள்ளிக்கு தனியாக வந்ததாகவும் இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
    இது தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top