• Latest News

    April 25, 2014

    பொதுபல சேனா அடாவடித் தனத்தில்..!- சட்டத்தரணிகள் சங்கம்

    பொதுபல சேனாவின் அடாவடித் தனங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    அந்த சங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசாங்கத்தின் முக்கிய அங்கீகாரம் பெற்ற அமைச்சர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும் பொதுபல சேனா ஊடகங்களுக்கு தெரியவே அச்சுறுத்தி வருகின்றது.
    இதனை தட்டிக் கேட்க இலங்கை அரசாங்கத்துக்கு தைரியம் இல்லையா? என்று சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இப்படி ஒரு மூர்க்கத்தனமான அமைப்பினை இலங்கையில் நடமாட விட்டுள்ளமை மக்களுக்கு அரசாங்கம் செய்கின்ற அநியாயம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுபல சேனா அடாவடித் தனத்தில்..!- சட்டத்தரணிகள் சங்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top