• Latest News

    April 19, 2014

    சர்வதேச மற்றும் தேசிய விசாரணைகள் தேவை: ஐக்கிய தேசிய கட்சி

    தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய விசாரணைகள் தேவை என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    கட்சியின் பதில் எதிர்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் .ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது  தக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 

    இது தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டு, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடமும், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடமும் கோரவிருப்பதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச மற்றும் தேசிய விசாரணைகள் தேவை: ஐக்கிய தேசிய கட்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top